May 12, 2025, 4:28 PM
35 C
Chennai

ஆங்கிலேயர் ஆளுகையில் மதுரை பாளையங்களின் வருமானம்

மதுரை ஜில்லா இங்கிலீஷ்காரர் வசமாகி மிஸ்டர் வின்ச் ( Mr. Wynch ) காலத்தில் ( 1795 நவம்பர் ) மதுரையைச் சார்ந்த 24 பாளையப்பட்டுகளின் விவரம் வருமாறு :
( சக்கரம் = கிட்டத்தட்ட இரண்டு ரூபாய் மதிப்புள்ள நாணயம் – 1795-இல்)
( 1 ) கோம்பை : 3000 சக்கரம் வருமான முள்ளது . 1500 சர்க்கார் கிஸ்தி . அப்பாஜி கவுண்டர் பாளையக்காரர் ; கம்பளிய ஜாதி ; அவருக்கு 100 சேவகருண்டு .
( 2 ) எச்சக்க நாய்க்கனூர் : -500 சக்கரம் வருமானம் ; பாளையக்காரர் ; கம்பளிய ஜாதி ; வாலிபர் .
( 3 ) தேவாரம் – 357 சக்கர வருமானம் . 110 சக்கிரம் சர்க்கார் கிஸ்தி . பாளையக்காரர் கம்பளத்தார் ஜாதி . போடிநாயக்கனூர் மாப்பிள்ளை .
( 4 ) போடி நாயக்கனூர் :-7000 சக்கர முள்ள பெரிய பாளையப்பட்டு. திருமலபோடி நாய்க்கர் என்பவர் பாளையக்காரர் . கம்பளத்தார் . இது 5000 சக்கரம் கிஸ்தி தரக்கூடுமாம்.
( 5 ) கண்டப்ப நாயக்கனூர் : பெரிதும் உபயோக மற்ற நிலமுள்ளது . 4500 சக்கரம் வருமானம் . 1900 சக்கரம் சர்க்கார் கிஸ்தியுள்ளது .
(6 ) தேவதானப்பட்டி : 4000 சக்கரம் வருமானம் . 3100 சர்க்கார் கிஸ்தி . நல்லதாச நாயக்கர் என்னும் பாளையக்காரர். கம்பளத்தார் .
( 7 ) தொட்டியன் கோட்டை : 1600 சக்கரம் வருமானம் . சுல்தான் காலத்தில் 850 சக்கரம் சர்க்கார் கிஸ்தி . தொட்டப்ப நாய்க்கரென்னும் பாளையக்காரர் , கம்பளத்தார் .
( 8 ) நிலக்கோட்டை : 9000 சக்கர வருமானம் . 7000 சக்கரம் கிஸ்தி . கோலப்ப நாயக்கரென்கிற பாளயக்காரர். கம்பளத்தார் .
( 9 ) அம்மய நாயக்கனூர் : அநேக மலைநாடுகளுடன் சேர்ந்த பெரிய பாளையப்பட்டு . 11,000 சக்கரம் வருமானம் . 3,600 சக்காம் சர்க்கார் கிஸ்தி . கத்திரப்ப நாயக்க என்கிற பாளையக்காரர் கம்பளத்தார்
( 10 ) அப்பலத்தாரு : — 2000 சக்கரம் வருமானம் . 1500 சக்கரம் சர்க்கார் கிஸ்தி . மகாபல நாயக்கரென்னும் பாளையக்காரர் , கம்பளத்தார் .
( 11 ) தவசுமேடை : -65 சக்கரம் சர்க்கார் கிஸ்தி . சோட்ல நாயக்கரென்னும் பாளையக்காரர் , கம்பளத்தார் .
( 12 ) எமகாலபுரம் : -550 சக்கரம் சர்க்கார் கிஸ்தி . பாளையக்காரர் , கம்பளத்தார் .
( 13 ) மறவநாடு : – கம்பளஜாதி . சின்ன அளகிரி நாயக்கர் பாளையக்காரர்; 600 சக்கரம் சர்க்கார் கிஸ்தி .
( 14 ) சொக்கம்பட்டி : – பழனிமுத்து நாயக்கர் பாளையக்காரர் .
( 15 ) எரியோடு : -12 கிராமங்களும் , 39 சிறு கிராமங்களுமுள்ள பெரிய பாளையப்பட்டு . 9000 சக்கரம் வருமானம் . 6700 சக்கரம் சர்க்கார் கிஸ்தி . பாளையக்காரராகிய முத்துக்குமாரவேலு பெல்லகொண்டம நாயக்கர் , வடுகர் .
( 16 ) பள்ளியப்ப நாயக்கனூர் : -2000 சக்கரம் வருமானம் . 1000 சக்கரம் சர்க்கார் கிஸ்தி . பழனியப்ப நாயக்கரென்னும் பாளையக்காரர் , கம்பளத்தார் .
( 17 ) இடையகோட்டை : – நல்ல பாளையப்பட்டு , சர்க்கார் கிஸ்தி 2337 சக்கரம் . பாளையக்காரர் கம்பளத்தார் .
( 18 ) மாம்பறை : – 400 சக்கரம் சர்க்கார் கிஸ்தி . சாகரம் தொம்மநாயக்கர், கம்பளத்தார் .
( 19 ) பழனி : – பெரிய பாளையப்பட்டு , இது பழனி, இட்டம்பாடி , ஆயக்குடி என்று மூன்று பிரிவுகளாக வகுக்கப்பட்டிருக்கின்றது . இந்தப் பாளையப்பட்டு முன் 80,000 ரூபாய் கிஸ்தி கட்டிக்கொண்டுவந்து , பிறகு 16,000 சக்கரமாகக் கட்டியது . 25,000 சக்கரம் கட்டக்கூடிய ஸ்திதியிலிருக்கிறது . இதன் முன் பாளையக்காரராகிய வேலாயுத நாயக்கர் , வேடஜாதியார் .
( 20 ) ஆயக்குடி : — 8000 சக்கரம் வருமான முடையது . 4000 சக்கரம் சர்க்கார் கிஸ்தி. பாளையக்காரராகிய ஓபிளி கொண்டம நாயகர் , வேடஜாதி
( 21 ) விருபாக்ஷி : – மலைநாடாகிய இது பெரிய பாளையப்பட்டு . 12,000 சக்காம் வருமானம் . 6000 சர்க்கார் கிஸ்தி . பாளையக்காரர் குப்பண்ண நாயக்கர் , கம்பளத்தார் .
( 22 ) கண்ணியவாடி : – இது 14 பெரிய கிராமங்களும் , 48 சிறு கிராமங்களு முள்ள பெரிய பாளையப்பட்டு , 21,000 சக்கரம் வருமானம் . 12300 சர்க்கார் கிஸ்தி .
( 23 ) மாதூர் : – பெரிய பாளையப்பட்டு , கடனில் மூழ்கி விட்டபடியால் , கவர்ன்மென்டார் மானேஜ்மென்டில் இருக்கிறது . பாளையக்காரர் வேங்கடசாமி நாயடு .
இனி வடகரை , எட்டயாபுரம் , இராமநாதபுரம் , சிவ கங்கை , புதுக்கோட்டை முதலான சில பெரிய பாளையப் பட்டு ஜமீன்களின் சங்கதிகளைச் சங்கிரகமாக இதனடியிற் காணலாம் .
வடகரை ஜமீன்தாரரின் விவரம் .
வடகரை ஜமீன்தாரரவர்களுடைய ஆதி தந்தையாகிய ஸ்ரீராமபத்திர நாயடுகாரு மதுரையில் முதலில் ஆண்டு வந்த இராஜா கோட்டய நாகம நாயடுகாருடைய சேனைத் தலைவராக இருந்தவர் . இந்த நாகம நாயடுகாருக்குப் புத்திக சந்தானமில்லாக் குறைவால் காசிக்ஷேத்திரத்திற்கு யாத்திரை போனபோது , அவருடைய சமஸ்தானத்தை இந்த ஸ்ரீராமபத்திர நாயடுகாரு அவருக்குப் பிரதிநிதியாக இருந்து இராஜ்ஜியத்தை யாண்டுவந்ததன்றியில் ; நாகம் நாயடுகாரு சோழராஜாவின் மேல் படையெடுத்துப் போன போதும் , பிறகு ஸ்ரீ விசுவநாத நாயுடுகாரு மதுரையைப் பிடிக்க வந்தபோதும் , தக்க உதவி செய்து வந்ததன்றியில் ; கம்பம் கோட்டையை முற்றுகை போட்டதில் விசேஷ உதவி செய்ததனால் , அவரைப் பழனிக்கருகிலும் , வைகை நதிக்கு வடகரையிலு மிருக்கும் வடகரை பாளையப்பட்டுக்கு பாளையக்காரராக ஆக்கினார் . இந்த வடகரை பாளையக் காரரும் , சொக்கம்பட்டி ஊற்றுமலை பாளையக்காரர்களும் இராமநாதபுரம் சேதுபதி யவர்களுக்கு மற்றப் பாளையக்காரர்களைப்போல எவ்விதமான வணக்கமும் செய்வதில்லையாம் . 1795 இதன் வருமானம் 6500 சக்கரமாம்.
(பகடால நரசிம்மலு நாயுடு 1919-ஆம் வருடம் எழுதிய தஷண இந்திய சரித்திரத்திலிருந்து)
ALSO READ:  IPL 2025: எப்படி சாத்தியம்... ரசிகர்களை கவர்ந்திழுத்த சூர்யவன்ஷியின் பேட்டிங்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கள்ளழகர் திருவிழாவில் பக்தர் மரணம்; அமைச்சருக்கு இந்து முன்னணி கேள்வி!

இனியாவது இந்துக்களை மாற்றாந்தாய் பிள்ளைகள் போல் கருதாமல் இந்து கோயில் விழாக்களில் உரிய பாதுகாப்பும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது

அமெரிக்காவின் பங்கு வெறும் பாராட்டு மட்டுமே!

இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தம்: அமெரிக்கா தலையீடு இல்லாத சமாதானம்!

சாணம்பட்டி பதினெண் சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி: அன்னதானம், மருத்துவ முகாம்!

சாணம்பட்டி பதினெண் சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி பெருவிழா: அன்னதானம் மருத்துவ முகாம்!

வைகை ஆற்றில் கள்ளழகர் வேடத்தில் ஜனக நாராயண பெருமாள்!

சோழவந்தான் வைகை ஆற்றில் ஜெனக நாராயண பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் 50 ஆயிரத்திற்கும்

காவிரித்தாயே பெருகி வா

சித்ரா பௌர்ணமியான இன்று (12.05.25) மாலையில், ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டபத்தில் உலக சித்தர்கள் சர்வசமய கூட்டமைப்பு மற்றும் சிவனடியார்கள்

Topics

கள்ளழகர் திருவிழாவில் பக்தர் மரணம்; அமைச்சருக்கு இந்து முன்னணி கேள்வி!

இனியாவது இந்துக்களை மாற்றாந்தாய் பிள்ளைகள் போல் கருதாமல் இந்து கோயில் விழாக்களில் உரிய பாதுகாப்பும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது

அமெரிக்காவின் பங்கு வெறும் பாராட்டு மட்டுமே!

இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தம்: அமெரிக்கா தலையீடு இல்லாத சமாதானம்!

சாணம்பட்டி பதினெண் சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி: அன்னதானம், மருத்துவ முகாம்!

சாணம்பட்டி பதினெண் சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி பெருவிழா: அன்னதானம் மருத்துவ முகாம்!

வைகை ஆற்றில் கள்ளழகர் வேடத்தில் ஜனக நாராயண பெருமாள்!

சோழவந்தான் வைகை ஆற்றில் ஜெனக நாராயண பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார் 50 ஆயிரத்திற்கும்

காவிரித்தாயே பெருகி வா

சித்ரா பௌர்ணமியான இன்று (12.05.25) மாலையில், ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டபத்தில் உலக சித்தர்கள் சர்வசமய கூட்டமைப்பு மற்றும் சிவனடியார்கள்

ராணுவத்தின் செய்தியாளர் சந்திப்பில்… ஊ(ட)கத்தனங்கள்!

ஆபரேஷன் சிந்தூர் எப்படி நடந்தது, என்ன நடந்தது என்பது குறித்து நாட்டுக்கு விளக்குவதற்காக, இன்று மாலை ஊடக செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சித்ரா பௌர்ணமி விழா; வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்!

லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் கோவிந்தா பக்தி கோஷம் விண்ணதிர பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர் - கைகளில் சர்க்கரை தீபம் ஏந்தி மனமுருக

பஞ்சாங்கம் மே 12 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories