கிருஷ்ணன் ராதை வேடமிட்ட குழந்தைகளுக்கு நாடகக் கலைஞர்கள் பரிசு வழங்கி பாராட்டு!

Published:

usilampatti sri krishna jayanthi - 2026
#image_title

மதுரை, உசிலம்பட்டி அருகே கிருஷ்ண ஜெயந்தி-யை முன்னிட்டு கிருஷ்ணன் – ராதை வேடமணிந்த 50க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நாடக கலைஞர்கள் பரிசு வழங்கி பாராட்டி கிருஷ்ண ஜெயந்தி-யை கொண்டாடினர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் கிராம மக்கள் சார்பில் பங்குணி பொங்கல், புரட்டாசி பொங்கல் திருவிழா காலங்களில் வீர அபிமன்யு சுந்தரி நாடகம் அரங்கேற்றப்படுவது வழக்கம்.,

இந்த நாடகத்தில் நடிக்கும் நாடக கலைஞர்களான கிராம மக்கள் கிருஷ்ண ஜெயந்தி-யை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் நாடக மேடையில் உள்ள கிருஷ்ணன் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்தும், பொங்கல் வைத்தும், பூஜை செய்து வழிபடுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.,

இந்த ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி-யை முன்னிட்டு இன்று நாடக மேடையில் உள்ள கிருஷ்ணன் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து, பொங்கல் வைத்து பூஜை செய்து நாடகத்தில் உள்ள கிருஷ்ணன் ராதை பாடல்களை பாடி வழிபாடு செய்தனர்.,

இந்நிகழ்வில் கிராமத்தில் உள்ள குழந்தைகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணன் – ராதை வேடமணிந்து வந்து சிறப்பித்தனர்., இதனால் நெகிழ்ச்சியடைந்த நாடக கலைஞர்கள் கிருஷ்ணன் ராதை வேடமணிந்த அனைத்து குழந்தைகளுக்கும் பரிசு வழங்கி பாராட்டி, கிருஷ்ண ஜெயந்தி -யை கொண்டாடினர்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

நிகழ்ச்சி காணொளி :

Related articles

Recent articles

spot_img