செங்கோட்டையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 21வது பிறந்தநாள்!

Published:

DSC 0593 scaled e1727065726597 - 2026


செங்கோட்டையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 21வது பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாட்டம்.

செங்கோட்டை இரயில் நிலைய வளாகத்தில் வைத்து பொதிகை
எக்ஸ்பிரஸ் இரயிலுக்கு 21வது பிறந்தநாள் செங்கோட்டை இரயில் பயணிகள் சங்கம் மற்றும் வர்த்தக சங்கம் சார்பில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

தென்மாவட்ட பயணிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த 20ஆண்டுகளுக்கு முன்பு பொதிகை எக்ஸ்பிரஸ் இரயில் சேவை துவங்கப்பட்டது. இந்த இரயிலானது செங்கோட்டையிலிருந்து பொதிகை எஸ்பிரஸ் இரயில் தென்காசி, கடையநல்லுார் சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, விருதுநகர், மதுரை வழியாக சென்னை வரை
நாள்தோறும் இயக்கப்படுகிறது.

இதேபோல் சென்னையிலிருந்து செங்கோட்டைக்கு இந்த இரயில் வந்து செல்கிறது. இந்நிலையில் பொதிகை எக்ஸ்பிரஸ் நேற்று செப்-20ஆம் தேதியில் 20வது ஆண்டு நிறைவு பெற்று 21வது ஆண்டு துவக்க நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் செங்கோட்டை இரயில் பயணிகள் சங்கம் மற்றும் வர்த்தக சங்கம் சார்பில் இரயில் நிலைய வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இரயில் ஓட்டுநர்கள் அனில்குமார், அஸ்லாம்ஹனீப் ஆகியோருக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

பின்னா் கேக் வெட்டி ஓட்டுநர்கள், மற்றும் இரயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் செங்கோட்டை இரயில் பயணிகள் சங்க பொருளாளா் கேகே.சுந்தரம், உறுப்பினா்கள் சங்கரபாண்டியன், நவநீதகிருஷ்ணன், மீனாட்சிசுந்தரம் மற்றும் சமூக ஆர்வலா்கள் பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related articles

Recent articles

spot_img