வடகிழக்குப் பருவமழைக் காலத்திற்கான நீண்ட கால வானிலை முன்னறிவிப்பு!

weather update in chennai - 2026
#image_title


இந்திய வானிலையியல் துறை வெளியிட்டுள்ள 2024ஆம் ஆண்டு வடகிழக்குப்பருவமழைக் காலத்திற்கான நீண்ட கால வானிலை முன்னறிவிப்பு

— முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்


          இந்திய வானிலை ஆய்வுத்துறையின் தலைவர் முனைவர்ம்ருத்துஞ்சய மொஹொபாத்ரா கடந்த அக்டோபர் முதல் தேதியன்று நாட்டில் தென்மேற்குப் பருவமழைஎவ்வாறு பெய்துள்ளது என்பது பற்றியும் வடகிழக்குப் பருவமழை எப்படிப் பெய்யும் என்பதுபற்றியும் காணொலி வழியாக பத்திரிகையாளர்களிடம் உரையாடினார்.

          இந்திய வானிலை ஆய்வுத்துறை நான்கு வகையானவானிலை முன்னெச்சரிக்கைகளை வெளியிடுகிறது. அவையாவன (1) Nowcasting என ஆங்கிலத்தில்அழைக்கப்படும். இது ஒரு மணி முதல் மூன்று மணி நேரத்திற்கு வானிலை எப்படியிருக்கும்எனச் சொல்லும். (2) குறுகிய நேர வானிலை முன்னறிவிப்புகள் (Shrot range forecast).

இவை ஒன்று முதல் மூன்று நாள்களுக்கு செல்லுபடியாகும். (3) நடுத்தர வானிலை முன்னறிவிப்புகள்.இவை நான்கு முதல் பத்து நாள்கள் வரையிலான காலத்திற்கான வானிலை முன்னறிவிப்பு. (4) நீண்டகால வானிலை முன்னெச்சரிக்கை. பத்து நாட்களுக்கு அதிகமான காலத்திற்கு இது வழங்கப்படுகிறது.இந்திய வானிலை ஆய்வுத்துறை இவ்வகையில் தென்மேற்கு பருவமழை கேரளாவில்  தொடங்கும் தேதி, அப்பருவத்தில் பெய்யக்கூடிய மழை,வடகிழக்கு பருவமழை மற்றும் குளிர்காலம் போன்றவை இதில் அடங்கும்.

          தென்மேற்குப் பருவமழை மற்றும் வடகிழக்குப்பருவமழைக் கால நீண்ட கால வானிலை முன்னெச்சரிக்கையில் மழை இயல்பை விட அதிகமாகப் பெய்யுமா?குறைவாகப் பெய்யுமா அல்லது இயல்பை ஒட்டிப் பெய்யுமா என்பது கூறப்பட்டிருக்கும். ஒருகுறிப்பிட்ட பகுதியில், அல்லது ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் எவ்வளவு மழை பெய்யும் என்பது சொல்லப்பட்டிருக்காது.

ALSO READ:  சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

எனவே தான் இதனை காலநிலை முன்னெச்சரிக்கை (Climate forecast) எனவும்கூறுவர். வடகிழக்குப் பருவமழைக்காலத்தில் தமிழகத்தில் குறிப்பாக எவ்வளவு மழைபெய்யும்?எவ்வளவு புயல் அடிக்கும்? பெருமழைச் சம்பவங்கள் எத்தனை இருக்கும்? என்பது போன்ற முன்னரிவிப்புகள்இதில் இருக்காது.

          இதன் காரணம்  என்னவெனில், இவற்றை அறியக்கூடிய காரணிகள் நமக்குஅறிவியல் பூர்வமாகக் கிடைப்பதில்லை. இதனால் இத்தகைய வானிலை முன்னறிவிப்புகள் செய்யமுடிவதில்லை.

வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பெய்யக் கூடிய உத்தேச மழையளவு

இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை பற்றிய முன்னறிவிப்பின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

அ)தென் இந்தியாவில் உள்ள ஐந்துவானிலை துணைப்பிரிவுகளில் (தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால், கடலோர ஆந்திரப் பிரதேசம், இராயலசீமா, கேரளா மற்றும் மாஹே மற்றும் தெற்குஉள் கர்நாடகா) வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் மழைப்பொழிவுஇயல்பை விட அதிகமாக இருக்கும்.அதாவது நீண்ட கால சராசரியைவிட 112% அதிகமாகயிருக்கும். பருவசராசரி (LPA – long Periodaverage) வடகிழக்குப் பருவமழைகாலத்தில் (அக்டோபர்-டிசம்பர், 2024). இதே காலகட்டத்தில் மத்தியஇந்தியாவின் பல பகுதிகளிலும், தென்தீபகற்ப இந்தியாவிலும், வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகளிலும் இயல்பிலிருந்துஅதிகமான மழை பெய்யக்கூடும். இருப்பினும், வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகள் மற்றும்இந்தியாவின் தென்பகுதியில் சில குறிப்பிட்ட பகுதிகளில்இயல்பை விட குறைவான மழைபெய்ய வாய்ப்புள்ளது.

ALSO READ:  தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

ஆ)2024 அக்டோபரில், இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் இயல்பை விட இயல்பான மழைஅல்லது இயல்பைவிட அதிகமான மழையைப் பெறக்கூடும்.இருப்பினும், வடகிழக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகள் மற்றும்தென் தீபகற்பத்தில் ஒரு சில பகுதிகள்இயல்பை விட குறைவான மழையைஅனுபவிக்க வாய்ப்புள்ளது.

இ)அக்டோபரில், மத்திய இந்தியா மற்றும் அதை ஒட்டிய தென்தீபகற்பத்தில் உள்ள சில பகுதிகளைத்தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பான பகல்நேர அதிகபட்ச வெப்பநிலை நிலவும்.

ஈ)தற்போது, ​​கிழக்கு பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடலில்சராசரிக்கும் குறைவான கடல் மேற்பரப்பு வெப்பநிலையுடன்பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடலில்நடுநிலையான எல் நினோ-தெற்குஅலைவு (ENSO) நிலைகள் காணப்படுகின்றன. நிகழ்தகவு முன்னறிவிப்பு, 2024ஆம் ஆண்டு பருவமழைக்குப்பிந்தைய காலத்தில் லா நினா நிலைமைகள்உருவாக அதிக வாய்ப்பைக் குறிக்கிறது.

உ)சராசரிக்கும் மேலான கடல் மேற்பரப்பு வெப்பநிலை(SSTs-Sea Surface Temperatures) தற்போதுஇந்தியப் பெருங்கடலின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகிறது. தற்போது, ​​இந்தியப் பெருங்கடலில் நடுநிலையான இந்தியப் பெருங்கடல் இருமுனை (IOD-Indian Oceandipole) நிலை நிலவுகிறது. சமீபத்திய MMCFS (MMCFS-MonsoonMission Climate Forecast System) முன்னறிவிப்பு,2024 ஆம் ஆண்டு பருவமழைக்குப் பிந்தைய காலத்தில் நடுநிலை IOD நிலைமைகள் தொடர வாய்ப்புள்ளது என்பதைக்குறிக்கிறது.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

நவம்பர் 2024க்கான மழை மற்றும் வெப்பநிலைக்கான கண்ணோட்டத்தை அக்டோபர் 2024 இறுதியில் இந்திய வானிலை ஆராய்ச்சித் துறைவெளியிடும். வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதம்17ஆம் த்தி வாக்கில் தொடங்க வாய்ப்புள்ளது.

          என்னுடைய சொந்தக் கணிப்பின்படி அக்டோபர் மாதம் மூன்றாவது வாரத்தில் தமிழகம் முழுவதும் நல்ல மழைக்கான வாய்ப்பிருக்கிறது. அச்சமயத்தில் வட தமிழகத்தின் கரையைக் கடக்கும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தோன்றவும் வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீபகற்ப இந்தியாவைக் கடந்து அரபிக்கடலில் நுழைந்து அங்கும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறா வாய்ப்புள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories