December 6, 2025, 12:26 AM
26 C
Chennai

உவரி கோயில் அர்ச்சகர்களை மிரட்டி வெளியேற்றிய அறநிலையத்துறை; இந்து முன்னணி கண்டனம்!

hindumunnani - 2025


உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் அர்ச்சகர்களை மிரட்டி வெளியேற்றிய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையின் அராஜகச் செயலைக் கண்டிப்பதாக இந்து முன்னணி தெரிவித்துள்ளது. இந்து முன்னணி அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர். த.அரசுராஜா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது…

உவரி அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோவிலில் காவல்துறை மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் புகுந்து அர்ச்சகர்களை வெளியேற்றி கோவில் சன்னதியை பூட்டிய அராஜகத்தை இந்து முன்னணி கண்டிக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம் உவரி அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். இத்திருக்கோயிலில் இன்று 16.10.2024 காலை சன்னதிக்குள் காவல்துறையினர் மற்றும் அறநிலையத்துறையினர் நுழைந்து அங்கு பல ஆண்டுகளாக பரம்பரையாக பூஜை செய்து வரும் அர்ச்சகர்களை வெளியே தள்ளி கோவில் சன்னதியை பூட்டி உள்ளனர் இந்த அராஜக செயலை இந்தமுன்னணி பேரியக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

கோவிலில் மக்கள் வழிபடுவதற்கும் அதற்கு வசதிகள் செய்வதற்கும் தான் நிர்வாகமும் அறநிலையத்துறையும் காவல்துறையும் இருக்க வேண்டுமே தவிர அர்ச்சகர்களை வெளியேற்றி கோவிலை பூட்டுவது காட்டுமிராண்டித்தனமான செயலாகும்.

வேற்று மத வழிபாட்டு தலங்களில் இதுபோல் தமிழக அரசோ காவல்துறையோ சென்று பூட்டி விட முடியுமா ? திமுக அரசின் இந்துவிரோத நடவடிக்கைக்கு தொடர்ச்சியாக இந்த சம்பவம் நடந்துள்ளதாகவே பக்தர்கள் கருதுகின்றனர்.

மேலும் சுயம்புலிங்க சுவாமி திருக்கோவிலில் உள்ள நகைகளை அறநிலையத்துறை அதிகாரிகள் தற்போது கையகப்படுத்தி அளவீடு செய்து வருவதாக தெரிகிறது. தமிழக அரசின் நோக்கத்தை இது தெளிவுபடுத்துகிறது.

திருக்கோவில் நிர்வாகம் பக்தர்களின் வசதிக்கு திருக்கோவில் வளர்ச்சிக்கு எந்த உதவியும் செய்யாமல் பல ஆண்டுகளாக கோவில் வளர்ச்சிக்கு தடைக்கலாகவே இருந்து வருகிறது.

பக்தர்கள் வழிபட செல்லும் பாதைகள் எல்லாம் கம்பி வைத்து அடைத்து தொடர்ந்து பக்தர்களுக்கு திருக்கோவில் நிர்வாகம் இடையூறு செய்து வருகிறது.

இந்நிலையில் இன்று அர்ச்சகர்கள் வெளியேற்றப்பட்டு கோவில் பூட்டப்பட்டது மிகுந்த வேதனைக்குரிய செயலாகும்.

தமிழக அரசு மற்றும் அறநிலையத்துறையின் இந்த செயலை கண்டித்து நாளை சுயம்புலிங்க சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் மற்றும் அர்ச்சகர்கள் நடத்தும் போராட்டத்திற்கு இந்துமுன்னணி முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது இந்துமுன்னணி நிர்வாகிகளும் தொண்டர்களும் அந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என தெரிவித்துக்கொள்கிறது

உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவிலை பக்தர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் அடங்கிய குழுவின் நிர்வாகத்திற்கு கொண்டு வருவதே கோவிலின் வளர்ச்சிக்கும் பக்தர்களுக்கும் உறுதுணையாக இருக்கும்.

இந்துக்களின் வழிபாட்டு விவகாரங்களில் காவல்துறையும் அறநிலையத்துறையும் தமிழக அரசும் தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என இந்துமுன்னணி கேட்டுகொள்கிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories