February 22, 2026, 10:10 AM
26.1 C
Chennai

உவரி கோயில் அர்ச்சகர்களை மிரட்டி வெளியேற்றிய அறநிலையத்துறை; இந்து முன்னணி கண்டனம்!

hindumunnani - 2026


உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் அர்ச்சகர்களை மிரட்டி வெளியேற்றிய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையின் அராஜகச் செயலைக் கண்டிப்பதாக இந்து முன்னணி தெரிவித்துள்ளது. இந்து முன்னணி அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர். த.அரசுராஜா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது…

உவரி அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோவிலில் காவல்துறை மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் புகுந்து அர்ச்சகர்களை வெளியேற்றி கோவில் சன்னதியை பூட்டிய அராஜகத்தை இந்து முன்னணி கண்டிக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம் உவரி அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். இத்திருக்கோயிலில் இன்று 16.10.2024 காலை சன்னதிக்குள் காவல்துறையினர் மற்றும் அறநிலையத்துறையினர் நுழைந்து அங்கு பல ஆண்டுகளாக பரம்பரையாக பூஜை செய்து வரும் அர்ச்சகர்களை வெளியே தள்ளி கோவில் சன்னதியை பூட்டி உள்ளனர் இந்த அராஜக செயலை இந்தமுன்னணி பேரியக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

கோவிலில் மக்கள் வழிபடுவதற்கும் அதற்கு வசதிகள் செய்வதற்கும் தான் நிர்வாகமும் அறநிலையத்துறையும் காவல்துறையும் இருக்க வேண்டுமே தவிர அர்ச்சகர்களை வெளியேற்றி கோவிலை பூட்டுவது காட்டுமிராண்டித்தனமான செயலாகும்.

வேற்று மத வழிபாட்டு தலங்களில் இதுபோல் தமிழக அரசோ காவல்துறையோ சென்று பூட்டி விட முடியுமா ? திமுக அரசின் இந்துவிரோத நடவடிக்கைக்கு தொடர்ச்சியாக இந்த சம்பவம் நடந்துள்ளதாகவே பக்தர்கள் கருதுகின்றனர்.

மேலும் சுயம்புலிங்க சுவாமி திருக்கோவிலில் உள்ள நகைகளை அறநிலையத்துறை அதிகாரிகள் தற்போது கையகப்படுத்தி அளவீடு செய்து வருவதாக தெரிகிறது. தமிழக அரசின் நோக்கத்தை இது தெளிவுபடுத்துகிறது.

திருக்கோவில் நிர்வாகம் பக்தர்களின் வசதிக்கு திருக்கோவில் வளர்ச்சிக்கு எந்த உதவியும் செய்யாமல் பல ஆண்டுகளாக கோவில் வளர்ச்சிக்கு தடைக்கலாகவே இருந்து வருகிறது.

பக்தர்கள் வழிபட செல்லும் பாதைகள் எல்லாம் கம்பி வைத்து அடைத்து தொடர்ந்து பக்தர்களுக்கு திருக்கோவில் நிர்வாகம் இடையூறு செய்து வருகிறது.

இந்நிலையில் இன்று அர்ச்சகர்கள் வெளியேற்றப்பட்டு கோவில் பூட்டப்பட்டது மிகுந்த வேதனைக்குரிய செயலாகும்.

தமிழக அரசு மற்றும் அறநிலையத்துறையின் இந்த செயலை கண்டித்து நாளை சுயம்புலிங்க சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் மற்றும் அர்ச்சகர்கள் நடத்தும் போராட்டத்திற்கு இந்துமுன்னணி முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது இந்துமுன்னணி நிர்வாகிகளும் தொண்டர்களும் அந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என தெரிவித்துக்கொள்கிறது

உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவிலை பக்தர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் அடங்கிய குழுவின் நிர்வாகத்திற்கு கொண்டு வருவதே கோவிலின் வளர்ச்சிக்கும் பக்தர்களுக்கும் உறுதுணையாக இருக்கும்.

இந்துக்களின் வழிபாட்டு விவகாரங்களில் காவல்துறையும் அறநிலையத்துறையும் தமிழக அரசும் தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என இந்துமுன்னணி கேட்டுகொள்கிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories