வாடிப்பட்டி ஐயனார் கோயில் விழா: வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்த கோரிக்கை!

vadipatti vadamadu manjuvirattu - 2026
#image_title

மதுரை வாடிப்பட்டியில் ஆதி அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை நடைபெற்று வந்த  வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை மீண்டும் நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் காளை உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட நீரேத்தான் மேட்டுநீரேத்தான் கிராமத்திற்கு பாத்தியப்பட்ட ஆதி அய்யனார் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா வருடம்தோறும் நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வாடிப்பட்டி தாதம்பட்டி மந்தை திடலில்,  வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கமாக இருந்து வந்தது. .

இந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாதுகாப்பு கருதி காவல் துறையினர் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிக்கு கொடுத்து வந்த அனுமதியை ரத்து செய்தனர். இதனால் , காளை உரிமையாளர்கள் மாடுபிடி வீரர்கள் ஆகியோர் தங்களின் காளைகளை அவிழ்க்க முடியாமல், கவலையில் இருந்தனர் . 

இந்த ஆண்டாவது வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெறும் என்ற ஆவலில் இன்று காலை 10க்கும் மேற்பட்ட காளைகளுடன்,  அதன் உரிமையாளர்கள் வாடிப்பட்டி தாதம்பட்டி மந்தை திடலுக்கு காளைகளை கொண்டு வந்தனர் . ஆனால் , வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெறும் மந்தை திடலில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப் பட்டிருந்த நிலையில், காளை உரிமையாளர்களும் மாடுபுடி வீரர்களும் சோகத்துடன் திரும்பி சென்றனர் .

அங்கிருந்த காளை உரிமையாளர் கூறுகையில்  கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை முறையாக அனுமதி  பெற்று பொதுமக்களுக்கு எந்த சிரமமும் இல்லாமல் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியானது நடைபெற்று வந்தது. ஒரு சிலரின் தனிப்பட்ட காரணங்களுக்காக வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியானது நிறுத்தப் பட்டிருந்தது.

இந்த நிலையில் மீண்டும் போட்டியை நடத்துவதற்கு அரசு முன்வர வேண்டும் அதற்காக அமைச்சர் மூர்த்தி மற்றும் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து அடுத்த ஆண்டாவது வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை நடத்துவதற்கு ஏற்பாடு  செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Topics

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

Entertainment News

Popular Categories