May 18, 2025, 6:59 PM
32.4 C
Chennai

தவறை மூடி மறைக்க, மக்கள் மீது பழி போடும் அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வேண்டும்!

kadeswara subramaniam hindu munnani

இந்து சமய அறநிலையத்துறையின் தவறை மூடி மறைத்து பொதுமக்கள் மீது பழிபோடும் அமைச்சர் சேகர்பாபு பதவி விலகவேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

தமிழகத்தில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் ஆயிரக்கணக்கான கோவில்கள் உள்ளன. அந்த கோவில்களை முறையாக பராமரிப்பது, சரியான காலத்தில் குடமுழுக்கு செய்வது உள்ளிட்ட பல அடிப்படை பணிகளைக் கூடச் செய்யாமல் இந்து சமய அறநிலையத்துறை தோல்வியடைந்துவிட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பாபுராஜன்பேட்டை விஜய வரதராஜர் கோவிலை சீரமைக்க 2020ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் கூட இந்து சமய அறநிலையத்துறை நிறைவேற்றாததால் தற்போது நீதிமன்றம் இந்துசமய அறநிலையத்துறையை கண்டித்து உடனே சீரமைப்பு பணியை தொடங்க உத்தரவிட்டுள்ளது.

அதேபோல் சோளிங்கர் யோக நரசிம்மர் மலைக்கோவிலில் அடிப்படை வசதிகள் இல்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குன்றக்குடி கோவில்யானை இறப்பு,பழனி கோவில் யானை இறப்பு, திருச்செந்தூர் யானை தாக்கி பாகன்கள் இறப்பு என்று தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறையின் கையாலாகாத்தனம் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இதில் ஒரு படி மேலே போய் ஆளும் கட்சியின்‌ மற்றொரு அமைச்சராகிய பொன்முடி அவர்களும் இந்து சமய அறநிலையத்துறையின் குளறுபடிகளை பொது வெளியில் விமர்சித்துள்ளார்.

ALSO READ:  ஹிந்து நம்பிக்கையை கேவலப் படுத்தியவர் அமைச்சராக தொடர லாயக்கற்றவர்!

ஆனால் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களோ திட்டமிட்டு சங்கிகள் பொய் பரப்புவதாக பேட்டி கொடுக்கிறார். அமைச்சர் தன் தவறை மறைக்க பொதுமக்கள் மீது குற்றங்களை சுமத்துகிறார்.

தொடர்ந்து நீதிமன்றமும்,பொதுமக்களும் பல வகைகளில் கண்டித்த பிறகும் அறநிலையத்துறையிடம் எவ்வித மாற்றமும் இல்லை, முன்னேற்றமும் இல்லை.

எனவே நிர்வாக திறமையற்ற அறநிலையத்துறையின் அமைச்சர் திரு. சேகர்பாபு அவர்கள் பதவி விலக வேண்டும் என்று இந்துமுன்னணி வலியுறுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 18 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குற்றாலம் பராசக்தி கல்லூரி மாணவியர் சேர்க்கை – விவரம்!

நேர்முகத்தேர்வு விவரங்களுக்கு கீழ்க்காணும் ~link 🔗~ஐ அழுத்தவும்

பெரியண்ணன் டிரம்ப்புக்கு… இந்திய தேசபக்தையின் கடிதம்!

ஏனெனில் அவருக்கு அரணாக 140 கோடியில் ஒரு சில உள்நாட்டு துரோகிகளை கழித்தால்கூட மீதமுள்ள மக்கள் உறுதுணையாக நிற்கிறோம். சத்தியம் சோதனைகளுக்கு ஆளானாலும் என்றும் தோற்றதில்லை தோற்பதுமில்லை.

வெளிவராத ரகசியங்கள்! என்ன செய்யப் போகிறது பாகிஸ்தான்?

மசூத் அஸார் குடும்பத்தினருக்கு 50,000 டாலர்கள் தந்திருக்கிறது பாகிஸ்தான். அதாவது நிவாரண நிதியாக! நம் இந்திய தாக்குதலில் பலியானவர்களுக்கு கொடுக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

மாமன் பட வெளியீடு; மதுரையில் சூரியின் ரசிகர்கள் கொண்டாட்டம்!

மதுரை திருநகர் பகுதிகளில் சூரியின் அகில இந்திய தலைமை ரசிகர் மன்றம் சார்பில் பெண் ரசிகைகள் 10 பேர் பால்குடம் எடுத்து ட்ரம் செட் முழங்க ரசிகர் மன்ற

Topics

பஞ்சாங்கம் மே 18 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குற்றாலம் பராசக்தி கல்லூரி மாணவியர் சேர்க்கை – விவரம்!

நேர்முகத்தேர்வு விவரங்களுக்கு கீழ்க்காணும் ~link 🔗~ஐ அழுத்தவும்

பெரியண்ணன் டிரம்ப்புக்கு… இந்திய தேசபக்தையின் கடிதம்!

ஏனெனில் அவருக்கு அரணாக 140 கோடியில் ஒரு சில உள்நாட்டு துரோகிகளை கழித்தால்கூட மீதமுள்ள மக்கள் உறுதுணையாக நிற்கிறோம். சத்தியம் சோதனைகளுக்கு ஆளானாலும் என்றும் தோற்றதில்லை தோற்பதுமில்லை.

வெளிவராத ரகசியங்கள்! என்ன செய்யப் போகிறது பாகிஸ்தான்?

மசூத் அஸார் குடும்பத்தினருக்கு 50,000 டாலர்கள் தந்திருக்கிறது பாகிஸ்தான். அதாவது நிவாரண நிதியாக! நம் இந்திய தாக்குதலில் பலியானவர்களுக்கு கொடுக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

மாமன் பட வெளியீடு; மதுரையில் சூரியின் ரசிகர்கள் கொண்டாட்டம்!

மதுரை திருநகர் பகுதிகளில் சூரியின் அகில இந்திய தலைமை ரசிகர் மன்றம் சார்பில் பெண் ரசிகைகள் 10 பேர் பால்குடம் எடுத்து ட்ரம் செட் முழங்க ரசிகர் மன்ற

பஹல்காம்: இந்தியாவைப் பெருமைப் படுத்தும் மோடி!

பல இந்தியர்கள் தமது நலன் அறியாத அப்பாவிகளாக இருந்தாலும், பல சமயங்களில் சரியான வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போடத் தெரியாமல் இருந்தாலும், அவர்களின் பூர்வ ஜென்ம பலன் மோடி காலத்தில் வேலை செய்கிறதோ?

‘சிங்காரவேலனே தேவா’ மூலம் நினைவில் நிற்கும் பாடலாசிரியர்!

திரைப்படப் பாடலாசிரியர் கு. மா. பாலசுப்பிரமணியம் (மே 13, 1920 – நவம்பர் 4, 1994)

Entertainment News

Popular Categories