February 19, 2026, 6:51 PM
28.4 C
Chennai

இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

sabarimalai jan18 crowd - 2026

சபரிமலையில் நாளை (ஜன.19) இரவு வரை பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது.

சபரிமலையில் நெய் அபிஷேகம் இன்று நிறைவடைய உள்ள நிலையில் இன்று அதிகாலை நேரத்தில் இருந்தே பம்பை – சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. நெய் அபிஷேகம் செய்ய இன்று அதிகாலை 2 மணிக்கே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து காலை வரை நெய் அபிஷேகம் செய்து சென்றனர். ஜன.19ல் ஐயப்பனுக்கு எந்த அபிஷேகமும் கிடையாது. பக்தர்கள் சுவாமி தரிசனம் மட்டும் செய்யலாம்.

சபரிமலை மகரவிளக்கு மஹோத்ஸவத்தின் ஓர் அங்கமான தரிசனம் ஜனவரி 19ம் தேதி இரவு முடிவடைகிறது. இன்று மாலை 6 மணி வரை பக்தர்கள் பம்பை வழியாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

சன்னிதானத்தில் இரவு 10 மணி வரை மட்டுமே ஐயனை தரிசனம் செய்ய முடியும். 19ம் தேதி இரவு அத்தாழ பூஜைக்கு பின் மணிமண்டபம் முன் நடக்கும் குருதி பூஜையுடன் மகரவிளக்கு உத்ஸவம் நிறைவு பெறும்.

ஜனவரி 20ம் தேதி பந்தளம் பிரதிநிதி மட்டும் வருகை தருவார். காலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம் முடிந்து திருவாபரண ஊர்வலம் புறப்படும். மன்னர் பிரதிநிதி தரிசனம் முடிந்து, 6:30 மணிக்கு மேல்சாந்தி ஐயப்பன் சிலைக்கு விபூதி அபிஷேகம் செய்து, ஹரிவராசனம் அணிவித்து திருநடையை அடைப்பார்.

ஜனவரி 18ம் தேதி இன்று காலை 10.30 மணிக்கு நெய் அபிஷேகம் நிறைவடைகிறது. பின்னர் பந்தளம் அரச பிரதிநிதி முன்னிலையில் களபாபிஷேகம் நடைபெறும்.

இன்றிரவு மணிமண்டபம் களைகட்டுதல், சந்நிதிக்கு தீபம் ஏற்றுதல் ஆகிய வழிபாடுகளுடன் நிறைவடையும். நாளை ஜன.19ம் தேதி இரவு சரம்குத்தியில் சிறப்பு வழிபாடு, இரவு மளிகைபுறம் மஞ்சமாதாவுக்கு குருதி பூஜை வழிபாடு ஆகியவை நடைபெறும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

5 வருடம் ஏமாற்றினார்கள்… ஆட்சியை விட்டு போகும் போதும் ஏமாற்றுகிறார்கள்!

The DMK government, which has been deceiving the people of Tamil Nadu for the last five years, did not stop deceiving the public in its last budget speech.

Entertainment News

Popular Categories