February 13, 2025, 11:46 AM
25.6 C
Chennai

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால் பக்தர்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி உள்ளது.

சபரிமலை செல்லும் பிரதான வழிகளில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு எருமேலியில் இருந்து அழுதா நதி, பெரியானைவட்டம் வழியாகச் செல்லும் சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவிலான பெருவழிப்பாதை, சபரிமலை பக்தர்கள் செல்லும் பிரதான பாதையாக உள்ளது.

கடுமையான ஏற்ற இறக்கங்களும் ஆறுகளும் இயற்கை எழில் கொஞ்சும் வளங்களும் கொண்ட இந்தப் பெருவழிப் பாதையில் பக்தர்கள் கடந்த கார்த்திகை மண்டல பூஜை துவங்கிய நாள் முதல் பயணிக்கத் தொடங்கினர். தற்போது வரை இந்தப் பெருவழி பாதையில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பயணித்து வந்தனர்.

சபரிமலைக்கு பெருவழிப்பாதையில் நடைப்பயணமாக மேற்கொள்ளும் பக்தர்கள், எரிமேலிக்கு வந்து, எரிமேலி சாஸ்தாவுக்கு பேட்டை துள்ளி, பிரசித்தி பெற்ற மணிமாலா நதியில் நீராடி, தங்களது பெருவழிப்பாதை பயணத்தை தொடங்குவார்கள்.

பெருவழிப் பாதையில் மிக முக்கிய வன இடங்களாக, கருமலை, அழுதாநதி, சிறியானை வட்டம், பெரிய யானை வட்டம் உட்பட பல முக்கிய பகுதிகள் உள்ளன. கல்லிடம்குன்று என பல மலைப்பகுதிகளும் உள்ளன. இங்கே பக்தர்கள் பயணிக்கும் போது அவர்களுக்கு கேரள வனத்துறையினர் போதிய பாதுகாப்பு அளிப்பதும், கேரள வன சமிதி குழுக்கள் சார்பில் ஐயப்ப பக்தர்களுக்கு உணவுகளை மலிவான விலையில் வழங்குவதும் பிரதான கொள்கையாக இருந்தது. மேலும், முக்கிய இடங்களில் ஐயப்ப சேவா சங்கத்தினரும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கி வந்தனர். திருவாங்கூர் தேவசம் போர்டு முக்கிய மையங்களில் மருத்துவ முகாம்களும் நடத்தி வந்தது.

இந்த பெருவழிப்பாதை கடந்த இரு மாதங்களாக பெரும் பரபரப்புடன் இரவு பகலாக சரண கோஷம் மட்டுமே கேட்கும் வகையில் பரபரப்பாக இருந்தது. தற்போது சபரிமலையில் ஜனவரி 14 மகரஜோதி விழா முடிந்ததும், இந்த நடைபாதை அடைக்கப்பட்டு விட்டது. இதனால் தற்போது இந்த பெருவழிப் பாதையில் உள்ள கழிவுகளை சுத்தம் செய்யும் பணியில் வனத்துறை ஈடுபட்டு வருகிறது.

பக்தர்களின் சரண கோஷம் முழங்கிய இந்தப் பெருவழிப்பாதையில் தற்போது பறவைகளின் சத்தமும் யானை புலி போன்றவைகளின் சத்தமும்தான் கேட்கத் துவங்கியுள்ளது. இனி இந்தப் பெருவழிப்பாதையில், அடுத்த கார்த்திகை மண்டல பூஜை விழாக்காலத்தில்தான் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

தற்போது சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள், பம்பை நதி வழியில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். பம்பையில் இருந்து நீலிமலை ஏற்றம், சரங்குத்தி, சபரிபீடம் வழியாக பக்தர்கள் செல்கின்றனர். உப்பு பாறை வழி பாதை தற்போது மூடப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பம்பையில் வரும் 19ஆம் தேதி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். 20 ஆம் தேதி காலை நடை அடைக்கப்படுவதால், சபரிமலைக்கு பக்தர்கள் யாரும் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். பந்தள மன்னர் பிரதிநிதி மட்டுமே ஐயப்பனை தரிசனம் செய்வார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பிப்ரவரி 17 ஆம் தேதி வரை தினமும் 20,000 கன மீட்டர் தண்ணீர் திறந்து விடப்படும். பம்பா நதியில் நீர் மட்டம் ஐந்து சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.

Topics

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பிப்ரவரி 17 ஆம் தேதி வரை தினமும் 20,000 கன மீட்டர் தண்ணீர் திறந்து விடப்படும். பம்பா நதியில் நீர் மட்டம் ஐந்து சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.

உசிலம்பட்டி ஆண்டிச்சாமி கோயில், கருப்பட்டி கருப்பண்ண சாமி கோயில்களில் கும்பாபிஷேகம்!

மதுரை மாவட்டத்தில் உள்ள சிவன் ஆலயங்களில், சோமவாரம் பிரதோஷம் நடைபெற்றது.

மஞ்சமலை சுவாமி திருவிழா பிடி மண் எடுக்கும் விழா!

மஞ்சமலை சுவாமி திருவிழா பிடிமண் கொடுக்கும் நிகழ்ச்சியில் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பரங்குன்றம் தைப் பூசத் திருவிழாவில் அரிய காட்சிகள்!

இவ்வாறு ஆண்டிற்கு ஒரு முறை ஒரே நேரத்தில் 2 முருகப்பெருமான், 2 தெய்வானைஎழுந்தருளுவது என்பது திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் தைப்பூச திருவிழாவின் தனி சிறப்பாக இருந்து வருகிறது.

Entertainment News

Popular Categories