December 5, 2025, 11:54 AM
26.3 C
Chennai

வருது வருது… விஸ்டாடோம் பெட்டிகள்! பயணிகள் மகிழ்ச்சி!

train - 2025
#image_title

பயணிகளுக்கு மகிழ்ச்சி பொங்க வியக்க வைக்கும் புதுமையான ரயில் பயண அனுபவத்தை தரும் செங்கோட்டை – புனலுார் -கொல்லம் மலை ரயில் பாதையில் விஸ்டாடோம்’ கண்ணாடி கூரை பெட்டிகள் கொண்ட ரயில் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

பயணிகள் வலியுறுத்தி வரும் இந்த கோரிக்கையை தெற்கு ரயில்வே செங்கோட்டை – -புனலுார் மலை ரயில் பாதையில் ‘விஸ்டாடோம்’ கண்ணாடி கூரை பெட்டிகள் ரயில் இயக்க சில மாதங்களுக்கு முன் ரயில்வே வாரியத்திற்கு தென்னக ரயில்வே பரிந்துரை செய்தது .

இயற்கை எழில் ததும்பும் செங்கோட்டை — புனலுார் மலை ரயில் பாதையில் ‘விஸ்டாடோம்’ கண்ணாடி கூரை பெட்டிகளுடன் ரயில் இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தமிழகத்தை கேரள மாநிலத்துடன் இணைக்கும் மூன்று முக்கிய ரயில் வழித்தடங்களில் செங்கோட்டை – -புனலுார் வழித்தடம் பயணிகளுக்கு புதுமையான அனுபவமாக இருக்கும். 1904 முதல் பயன்பாட்டில் உள்ள 49.38 கி.மீ., மொத்த பயண துாரத்தில் மலையை குடைந்து 7 குகைகளும், 23 பெரிய பாலங்களும் அமைந்துள்ளன.

துரைப்பாதையில் செங்கோட்டையில் இருந்து புனலூர் வரையிலும் உயரமான மலைகள் மீதும் இரு மலைகள் இணைத்து கட்டப்பட்ட மிகப்பெரிய பாலங்கள் இதில் ஒன்று 16 கண் புகைப்படம் ஆகும் இந்த பாலங்கள் வழியே உச்சி மலை மீது ரயிலில் செல்லும் போது சுற்றுலா பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை தருகின்றது.

மேலும் பிரசித்தி பெற்ற ஆரியங்காவு கனவாய் தென்மலை குகை உட்பட மலைகளைக் குடைந்து குகைகள் அமைப்பும் இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது உள்ளாடு மட்டுமல்லாது வெளிநாடு சுற்றுலா பயணிகளையும் பெரிதும் கவர்ந்துள்ளது.

திருவனந்தபுரம் கோவளம் வர்கலா கடற்கரை பகுதிகளுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் இந்த பாதையில் ரயில்களில் பயணிப்பது அதிகம் விரும்புகின்றனர்.

முன்பு கொல்லம் செங்கோட்டை இடையே பயணிகள் ரயில் இயங்கியது. கொல்லம் செங்கோட்டை திருநெல்வேலி இடையில் நேரடி ரயில் இயக்குவது தற்போது அகல பாதையாக அமைக்கப்பட்ட பின்பு இந்த ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories