‘அந்த’ வசதி போச்சு; மயிலாடுதுறை – செங்கோட்டை ரயில் மீண்டும் அதே சிக்கலில்!

railway news - 2026
#image_title

செங்கோட்டை – மயிலாடுதுறை – செங்கோட்டை ரயில் சேவையில் இந்த மாதமும் பராமரிப்புப் பணிகள் காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக மதுரை – செங்கோட்டை மற்றும் திண்டுக்கல் – மயிலாடுதுறை இரு ரயில்களும் இணைக்கப்பட்டு மயிலாடுதுறை – செங்கோட்டை – மயிலாடுதுறை இடையே விரைவு ரயில் என இயக்கப்படும் நாள் முதல் அவ்வப்போது இந்த ரயிலானது பெரும்பாலான நாட்களில் விருதுநகரில் இருந்து மானாமதுரை காரைக்குடி வழித்தடத்திலேயே செல்கிறது. இதனால் பயணிகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

பொதுவாக செங்கோட்டை, ராஜபாளையம், தென்காசி, சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் நேரடியாக காலை நேரத்தில் மதுரை, திண்டுக்கல். திருச்சிக்கு செல்ல இந்த ரயில் நேரடி ரயிலாக இருக்கும்போது இந்த ரயில் அடிக்கடி தடம் மாற்றி இயக்கப்படுவது ரயில் பயணங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக வண்டி எண்: 16847/48 மயிலாடுதுறை – செங்கோட்டை – மயிலாடுதுறை இந்த மாதம் நாளை 04.06.2025 முதல் 30.06.2025 வரை சில தினங்களுக்கு மாற்று பாதையில் திருச்சி – காரைக்குடி – மானாமதுரை – விருதுநகர் வழியாக இயங்கும் என்கிறது ரயில்வே அறிவிப்பு.

வண்டி எண் 16847 மயிலாடுதுறையில் காலை 12.10 மணிக்கு புறப்பட்டு -மதுரை வழியாக செங்கோட்டை செல்லும் ரயிலானது வருகிற 4 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை புதன் & ஞாயிறு கிழமைகளில் மட்டும் மாற்று பாதை திருச்சி புதுக்கோட்டை காரைக்குடி மானாமதுரை அருப்புக்கோட்டை வழியாக இயங்கும். இந்த நாட்களில் திண்டுக்கல் மதுரை செல்லாது மற்ற நாட்களில் வழக்கம்போல் திண்டுக்கல் மதுரை வழியாக செல்லும்.

வண்டி எண் 16848 செங்கோட்டையில் காலை 6.55 மணிக்கு புறப்பட்டு – மயிலாடுதுறை செல்லும் விரைவு ரயில் இந்த மாதம் 4 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை வியாழன் & ஞாயிறு கிழமைகள் மதுரை திண்டுக்கல் திருச்சி வழியாகவும் மீதம் உள்ள மற்ற அனைத்து நாட்களும் மாற்று பாதையான மானாமதுரை சிவகங்கை காரைக்குடி புதுக்கோட்டை திருச்சி வழியாக இயங்கும்

திண்டுக்கல் மதுரைக்கு பயணம் மேற்கொள்வோர் முன்கூட்டியே இந்த தகவல்களை தெரிந்து கொண்டு திட்டமிட்டுக் கொள்ளவேண்டும்.

பொதுவாக மதுரை செங்கோட்டை திண்டுக்கல் மயிலாடுதுறை இரு ரயில்களும் இணைக்கப்பட்டு மயிலாடுதுறை செங்கோட்டை மயிலாடுதுறை இடையே விரைவு ரயில் முன்பாக இயக்கப்படும் நாள் முதல் அவ்வப்போது இந்த ரயிலானது பெரும்பாலான நாட்களில் விருதுநகரில் இருந்து மானாமதுரை காரைக்குடி வழித்தடத்திலேயே செல்கிறது. இதனால் பயணிகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

செங்கோட்டை ராஜபாளையம் தென்காசி சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர்கள், காலை நேரத்தில் அலுவலகம், வணிக ரீதியில் கடைகளுக்குச் செல்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக மதுரைக்கு இந்த ரயிலில் காலை நேரத்தில் அதிகளவில் பயணித்தனர். இது எக்ஸ்பிரஸாக மாறி, பின்னாளில் பெட்டிகள் குறைக்கப்பட்டு, மதுரை செல்லும் பயணிகள் பெரும் சிரமத்தைச் சந்தித்தனர். தொங்கிக் கொண்டு, நிற்கக் கூட இடம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில், மதுரைக்கே இந்த ரயில் போகாது எனும் நிலை அண்மைக் காலமாக நீடித்து வருவதால், மதுரைக்கு ரயில் பயணத்தையே நம்பியிருக்கும் பலர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...

இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு "அதிர்ச்சியளிக்கிறது" என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

Topics

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...

இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு "அதிர்ச்சியளிக்கிறது" என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

பீகாரின் பக்ஸார் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

இதனால், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி (வியாழன் கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.

பிஜேபி., உள்ள வந்துடும்!

இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.

Entertainment News

Popular Categories