மதுரை – செங்கோட்டை இடையே இரவு நேர ரயில் தேவை!

Published:

railway news - 2026
#image_title

மதுரை -தென்காசி-செங்கோட்டை மதுரை இடையே இரவு நேரத்தில் ரயில் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்

இந்த வழியில் இரவு நேர ரயில் இயக்கினால்
மூன்று ரயில்களுக்கு இணைப்பாக இருக்கும்.

மதுரையிலிருந்து இரவு 9:30 மணிக்கு கிளம்பி இரவு 12 மணிக்கு தென்காசி செல்லும் வகையில் இருந்தால் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னையிலிருந்து மதுரை வரும் பயணிகளுக்கு இணைப்பு ரயிலாக இருக்கும்.

விருதுநகருக்கு 10 மணிபோல் இந்த ரயில் வந்தால் திருச்சி காரைக்குடி வழியாக விருதுநகர் வரும் மெமு ரயிலுக்கு ஒரு இணைப்பு ரயிலாக இருக்கும்.

பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் – தூத்துக்குடியில் இருந்து தென்காசி வழியாக பாலக்காடு செல்லும் ரயிலுக்கும் இது ஒரு இணைப்பு ரயிலாக இருக்கும்.

தென்காசியில் இந்த ரயிலை பிடித்து கொல்லம் கோட்டயம் திருச்சூர் பாலக்காடு செல்லும் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

மறு மார்க்கமாக அதிகாலை 3.30 மணிக்கு செங்கோட்டை தென்காசியில் இருந்து கிளம்பி மதுரைக்கு காலை 6:15 மணிக்கு சென்றால்

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

பாலக்காட்டில் இருந்து தென்காசி வழியாக தூத்துக்குடி செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் தென்காசியில் மாறி பயணிப்பதற்கு வசதியாக இருக்கும்.

இந்த பயணிகள் மதுரை சென்று, சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ஐ பிடிப்பதற்கு வாய்ப்பு இருக்கும்.

விருதுநகரில் இருந்து – காரைக்குடி, திருச்சி பயணிகள் மெமு ரயிலை பிடிக்க வசதியாக இருக்கும்.

இந்த மாதிரியாக 3 ரயில்களுக்கு (வைகை எக்ஸ்பிரஸ், திருச்சி- காரைக்குடி- விருதுநகர் பயணிகள் ரயிலுக்கும், பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கும் ஒரு இணைப்பு ரயிலாக இருக்கும்.

மேலும் விருதுநகர்- காரைக்குடி- திருச்சி-காரைக்குடி-திருச்சி- விருதுநகர் ரயிலில் மானாமதுரையில் இறங்கினால் ராமேஸ்வரம் செல்வதற்கும் இந்த ரயில் இணைப்பு ரயிலாக இருக்கும்.

அதே போல தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டம் மக்களும் பாலருவி ரயிலில் பயணித்து தென்காசியில் இறங்கி அங்கிருந்து சென்னை வைகை ரயில் பிடிப்பதற்கும்,

காரைக்குடி, திருச்சி ரயிலில் விருதுநகரில் இருந்து பயணிக்கவும், மானாமதுரையில் இறங்கி ராமேஸ்வரம் செல்லவும் வசதியாக இருக்கும்.

மேலும் இது மதுரையில் இருந்து இரவில் கிளம்பி அதிகாலையில் மதுரைக்கு திரும்பிவிடும் என்பதால் இந்த குற்றால சீசன் டைமில் சென்று வருவதற்கு ஏதுவாக இருக்கும்.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

இரவிலே சென்று இரவிலேயே திரும்பி விடலாம்.

மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்ற விருதுநகர் மாவட்டம் மக்களுக்கு இந்த ரயிலானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் குற்றால சீசனில் ஒரே இரவில் சென்று திரும்புவதற்கும் வசதியாக இருக்கும்.

எனவே இந்த புதிய (மதுரை- தென்காசி -மதுரை) இரவு நேர ரயில் இயக்கினால் நல்லது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img