December 7, 2025, 5:01 PM
27.9 C
Chennai

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து-7 பேர் பலி..

1000803005 - 2025

சாத்தூர் அருகே இன்று ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 பேர் பலி 5 பேர் படுகாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னக்காமன் பட்டியில் செயல்பட்டு வரும் கோகுலேஸ் பட்டாசு தொழிற்சாலையில் இன்று செவ்வாய்க்கிழமை திடீர் வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த வெடி விபத்தினால் ஆலையில் உள்ள ஐந்து அறைகள் வெடித்து சிதறி தரைமட்டமானது. இந்த வெடி விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பலியாகினர். மேலும் படுகாயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர்.

சிவகாசியைச் சேர்ந்த கமல்குமார் என்பவருக்கு சொந்தமான கோகுலேஸ் பட்டாசு தொழிற்சாலை சின்னக்காமன்பட்டி பகுதியில் செயல்பட்டு வருகிறது. இது நாக்பூர் உரிமம் பெற்று செயல்பட்டு வரும் இந்த பட்டாசு ஆலையில் சுமார் 20க்கும் மேற்பட்ட அறைகளின் 50க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை வழக்கம்போல் பணி செய்ய தொடங்கிய நிலையில் உராய்வின் காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த வெடிவிபத்தினால் ஐந்து அறைகள் தரைமட்டமாகின இந்த வெடி விபத்தில் சிக்கி மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 5 பேர் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இந்த பட்டாசு வெடி விபத்து மீட்பு பணியில் சாத்தூர் மற்றும் சிவகாசி தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்
மீட்பு பணியின் போது மேலும் சில சடலங்கள் கைப்பற்றிய நிலையில் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் பலியாகியதாக தெரியவருகிறது. மேலும் மருத்துவமனைக்குச் சென்ற ஒருவரும் பலியாகிய நிலையில் வலி எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.
இரண்டு பெண்கள் நான்கு ஆண்கள் மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் என ஏழு பேர் இந்த வெடி விபத்தில் பலியாகியதாக தெரிவிக்கின்றனர்.

இந்த வெடி விபத்து குறித்து சாத்தூர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த பட்டாசு வெடி விபத்து குறித்து சாதாரண நகர் போலீஸார் விசாரணை நடத்திய நிலையில் பட்டாசு ஆலையின் மேலாளர் மற்றும் போர்ன் ஆகிய இருவரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பட்டாசு ஆலை வெடிவத்தில்

மீனம்பட்டியைச் சேர்ந்த மகாலிங்கம் ராமசாமிபுரத்தைச் சேர்ந்த வைரமணி

சூலக்கரையைச் சேர்ந்த லட்சுமி

  1. அனுப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த செல்லப்பாண்டி மற்றும்
  2. ராமமூர்த்தி
  3. ஓ கோவில்பட்டியைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி மற்றும்
  4. ராமஜெயம் ஆகியோர் பலியாகினர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories