December 5, 2025, 1:37 PM
26.9 C
Chennai

நெல்லை ராஜை வாசு கோயில் ஆனி திருதேரோட்டம் கோலாகலம்..

images 3 - 2025

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலின் ஆனிப்பெருந்திருவிழாவில் முக்கிய நிகழ்வாக திருதேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து பல்வேறு நேர்ச்சை செலுத்தி வழிபாடுகள் நடத்தினர்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலில் ஆனித் தேரோட்ட திருவிழா கடந்த ஜூன் 30ம் தேதி காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் நடந்தது. திருவிழாவையொட்டி தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. 7ம் திருவிழாவான நேற்றுமுன்தினம் (6ம் தேதி) காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.

images 4 - 2025

இதைத் தொடர்ந்து காலையில் பல்லக்கில் சுவாமி, அம்பாள் (தவழ்ந்த கோலத்தில்) வீதி உலா நடந்தது. பின்னர் இரவு 7 மணிக்கு சுவாமி வெள்ளிக்குதிரை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும், நடராஜபெருமான் சிவப்பு சாத்தியும் வீதிஉலா நடந்தது. தொடர்ந்து இரவு 10 மணிக்கு நடராஜ பெருமான் வெள்ளை சாத்தி உட்பிரகாரம் வலம் வருதல் நடந்தது.

தொடர்ந்து 8ம் திருவிழாவான நேற்று திங்கட்கிழமை (7ம் தேதி) காலையில் சுவாமி நடராஜ பெருமான் பச்சை சாத்தி வீதிஉலா வருதலும், மாலை 5 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் திருவீதி உலாவும் நடந்தது. தொடர்ந்து இரவு 10 மணிக்கு தேர்கடாட்சம் வீதி உலா சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்க கிளிவாகனத்திலும் வீதி உலா நடந்தது. ஆனித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9ம் திருவிழாவான இன்று (8ம் தேதி) நடந்தது. இதில் அதிகாலையில் சண்டிகேஸ்வரர், விநாயகர், சுப்பிரமணியர் தேர்கள் பக்தர்கள் மூலம் இழுக்கப்பட்டது. தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு மேல் 4 மணிக்குள்ளாக சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் தேரில் எழுந்தருளல் நடந்தது. இதைத் தொடர்ந்து சரியாக காலை 8.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.

தேரை தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆணி தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

சிந்தாமணி நாதசுவாமி கோவில் என்று அழைக்கப்படும் இக்கோவிலில் மூலஸ்தானத்தில் சிவன் பார்வதி சரிபாதியாக இணைந்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி தருகின்றனர் மூலஸ்தானத்தில் காட்சி தரும் ஒரே கோவில் இதுதான் என கூறப்படுகிறது .

இக்கோவில் தேரோட்டத்தை ஒட்டி திருத்தேர் அலங்கரிக்கப்பட்டு திருத்தேரில் சுவாமி அம்பாள் எழுந்தருளும் நிகழ்ச்சியும் பின்பு பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து பல்வேறு நேர்ச்சை செலுத்தி வழிபாடுகள் நடத்தினர் .திருத்தோரட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர் .

FB IMG 1751975798860 - 2025

இதுபோல் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பிரசித்தி பெற்ற மாயூரநாதர் சுவாமி கோவிலில் இன்று ஆணி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது இக்கோவிலில் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி கொடியேற்றி தினசரி பல்வேறு நிகழ்வுகளுடன் திருவிழா நிகழ்வுகளும் சுவாமி வீதி உலாவும் விமர்சையாக நடைபெற்றது. முக்கிய நிகழ்வான இன்று திருத்தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து பல்வேறு நேர்ச்சைகள் செலுத்தினர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories