
பொங்கல் பயண முன்பதிவு இன்று துவங்கியது.துவங்கிய சில நிமிடங்களில் பல ரயில்களில் காத்திருப்பு பட்டியலில் முன்பதிவு செய்து வைத்துள்ளனர் பலர்.
தமிழர் திருநாளான பொங்கல் 2026 ஜனவரி 14 அன்று கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் ரயிலில் பயணம் செய்ய இன்று (நவம்பர் 10) முதல் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே அறிவித்துள்ளது.
60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், ஜனவரி 9 முதல் ஜனவரி 18 வரை பயணிக்க விரும்புவர்கள், அதற்கேற்ப நவம்பர் 10 முதல் 19 வரை முன்பதிவு செய்து கொள்ளலாம். தினமும் காலை 8 மணி முதல் முன்பதிவு தொடங்கும் என்பதால், பயணிகள் முன்கூட்டியே தங்கள் இருக்கைகளை பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொங்கலுக்கு சொந்த ஊர் செல்பவர்கள் கவனத்திற்கு
தமிழ் திருநாளாம் பொங்கல் திருநாள் பண்டிகை வருகிற 2026 ம் வருடம் – ஜனவரி 15 வியாழன் அன்று கொண்டாடப்பட உள்ளது
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக 60 நாட்களுக்கு முன்பாகவே இரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது
ரயில் டிக்கெட் முன்பதிவு நாள் ——- பயண நாள் — பயண கிழமை
நவம்பர் 14 —– ஜனவரி 13- 2026 —- செவ்வாய்
நவம்பர் 15 —– ஜனவரி 14-2026 —– புதன் – போகிப் பண்டிகை
நவம்பர் 16 —– ஜனவரி 15-2026 — வியாழன் – பொங்கல்
நவம்பர் 17 — ஜனவரி 16-2026 — வெள்ளிக்கிழமை — மாட்டுப்பொங்கல்
நவம்பர் 18 — ஜனவரி 17-2026 — சனிக்கிழமை — உழவர் திருநாள்
நவம்பர் 19 — ஜனவரி 18-2026 — ஞாயிறு
நவம்பர் 20 — ஜனவரி 19-2026 — திங்கள்
வட இந்திய ரயில்களுக்கு முன்பதிவு தேதியில் 1 அல்லது 2 நாட்களுக்கு மாறுதல்கள் ஏற்படும்.
பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்குச் செல்ல விரும்புகிறவர்கள், ரயில் கால அட்டவணையின்படி, திட்டமிட்டு முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து கடைசி நேர நெருக்கடியை தவிர்க்கிப்போதே முன் பதிவு செய்து பயணிக்க தயாராகுங்கள்.





