
மலையாள புத்தாண்டு சிம்மம் முதல்நாள் மற்றும் ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை சனிக்கிழமை மாலை திறந்து புதிய திதந்திரி பொறுப்பேற்ற இன்று ஞாயிற்றுக்கிழமை மலையாள புத்தாண்டு வழிபாடுகள் சன்னிதானத்தில் கோலாகலமாக துவங்கியது.பல்லாயினக்கணக்கான பக்தர்கள் அதிகாலையிலேயே இருமுடி செலுத்தி சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.இவர்களுக்கு புதிய தந்திரி பிரசாதம் வழங்கினார்.
மலையாள புத்தாண்டு மற்றும் ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று முதல் ஓராண்டு காலத்துக்கான தந்திரியாக கண்டரரு மகேஷ் மோகனரரு பொறுப்பேற்றார்.
சனிக்கிழமை மாலை 5:00 மணிக்கு மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். வேறு பூஜைகள் இல்லை. இரவு 10:00 மணிக்கு நடையடைக்கப்பட்டது.

இன்று அதிகாலை 4:00 மணிக்கு ஐயப்பன் கோயில் நடை திறந்ததும் கணபதி ஹோமம் அபிஷேகத்தை தொடர்ந்து நெய்யபிஷேகம் தொடங்ககயது.பின்னர் உஷ பூஜை, மதியம் கலசாபிஷேகம், உச்ச பூஜை, மாலையில் தீபாராதனை, இரவு அத்தாழ பூஜை நடக்கும்.
21- ம் தேதி வரை எல்லா நாட்களிலும் காலை 11:00 மணி வரை நெய்யபிஷேகமும், இரவு 7:00 மணிக்கு படி பூஜையும் நடைபெறும். 21 இரவு 10:00 மணிக்கு நடையடைக்கப்படும். இன்று முதல் ஒரு ஆண்டு காலத்துக்கான தந்திரியாக மகேஷ் மோகனரரு நேற்று பொறுப்பேற்றார். தாழமன் தந்திரி குடும்பத்தைச் சேர்ந்த கண்டரரு ராஜீவரரு மற்றும் மகேஷ் மோகனரரு சுழற்சி முறையில் சபரிமலையில் பூஜைகளுக்கு தலைமை வகிக்கின்றனர்.
ஆவணி ஒன்றாம் தேதி கேரளாவில் வருடப்பிறப்பாக உள்ளதால் இன்று காலையில் ஐயப்பனை வழிபட நேற்று மாலையே பக்தர்கள் கூட்டம் பம்பை சபரிமலையில் நிரம்பி வழிந்தது.

இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷபூஜை, களபாபிஷேகம், புஷ்பாபிஷேகம் உள்பட வழக்கமான பூஜைகளுடன் உதயாஸ்தமன பூஜை, படிபூஜை உள்பட சிறப்பு பூஜைகள் இன்று தந்திரி மகேஷ் மோகனர் தலைமையில் லட்சார்ச்சனை நடைபெறும். வரும் 21ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். 21ம் தேதி இரவு 10 மணிக்கு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் ஆவணி மாத பூஜைகள் நிறைவடையும். சபரிமலையில் பலத்த மழை பெய்வதால் பக்தர்கள் பம்பையில் குளிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.





