December 5, 2025, 11:24 AM
26.3 C
Chennai

மலையாள புத்தாண்டு, மாத பூஜை சபரிமலையில் கோலாகலம்..

1000890602 - 2025

மலையாள புத்தாண்டு சிம்மம் முதல்நாள் மற்றும் ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை சனிக்கிழமை மாலை திறந்து புதிய திதந்திரி பொறுப்பேற்ற இன்று ஞாயிற்றுக்கிழமை மலையாள புத்தாண்டு வழிபாடுகள் சன்னிதானத்தில் கோலாகலமாக துவங்கியது.பல்லாயினக்கணக்கான பக்தர்கள் அதிகாலையிலேயே இருமுடி செலுத்தி சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.இவர்களுக்கு புதிய தந்திரி பிரசாதம் வழங்கினார்.

மலையாள புத்தாண்டு மற்றும் ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று முதல் ஓராண்டு காலத்துக்கான தந்திரியாக கண்டரரு மகேஷ் மோகனரரு பொறுப்பேற்றார்.

சனிக்கிழமை மாலை 5:00 மணிக்கு மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். வேறு பூஜைகள் இல்லை. இரவு 10:00 மணிக்கு நடையடைக்கப்பட்டது.

1000890601 - 2025

இன்று அதிகாலை 4:00 மணிக்கு ஐயப்பன் கோயில் நடை திறந்ததும் கணபதி ஹோமம் அபிஷேகத்தை தொடர்ந்து நெய்யபிஷேகம் தொடங்ககயது.பின்னர் உஷ பூஜை, மதியம் கலசாபிஷேகம், உச்ச பூஜை, மாலையில் தீபாராதனை, இரவு அத்தாழ பூஜை நடக்கும்.

21- ம் தேதி வரை எல்லா நாட்களிலும் காலை 11:00 மணி வரை நெய்யபிஷேகமும், இரவு 7:00 மணிக்கு படி பூஜையும் நடைபெறும். 21 இரவு 10:00 மணிக்கு நடையடைக்கப்படும். இன்று முதல் ஒரு ஆண்டு காலத்துக்கான தந்திரியாக மகேஷ் மோகனரரு நேற்று பொறுப்பேற்றார். தாழமன் தந்திரி குடும்பத்தைச் சேர்ந்த கண்டரரு ராஜீவரரு மற்றும் மகேஷ் மோகனரரு சுழற்சி முறையில் சபரிமலையில் பூஜைகளுக்கு தலைமை வகிக்கின்றனர்.

ஆவணி ஒன்றாம் தேதி கேரளாவில் வருடப்பிறப்பாக உள்ளதால் இன்று காலையில் ஐயப்பனை வழிபட நேற்று மாலையே பக்தர்கள் கூட்டம் பம்பை சபரிமலையில் நிரம்பி வழிந்தது.

1000890603 - 2025

இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷபூஜை, களபாபிஷேகம், புஷ்பாபிஷேகம் உள்பட வழக்கமான பூஜைகளுடன் உதயாஸ்தமன பூஜை, படிபூஜை உள்பட சிறப்பு பூஜைகள் இன்று தந்திரி மகேஷ் மோகனர் தலைமையில் லட்சார்ச்சனை நடைபெறும். வரும் 21ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். 21ம் தேதி இரவு 10 மணிக்கு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் ஆவணி மாத பூஜைகள் நிறைவடையும். சபரிமலையில் பலத்த மழை பெய்வதால் பக்தர்கள் பம்பையில் குளிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories