December 5, 2025, 9:01 AM
26.3 C
Chennai

மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஜிஎஸ்டி., வரி சீரமைப்பு! முன்கூட்டியே வந்த தீபாவளி இனிப்பு!

nirmala sitharaman - 2025

தில்லியில் நேற்று நடைபெற்ற 56வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், ஜி.எஸ்.டி., அடுக்குகளை, நான்கிலிருந்து இரண்டாக குறைக்க முடிவெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மறு சீரமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி., வரும் 22ம் தேதி முதல் 5, 18 என்ற இரண்டு விகிதங்களில் மட்டுமே வசூலிக்கப்படும். 12 மற்றும் 28 ஆகிய விகிதங்கள் நீக்கப்பட்டுள்ளன. பல முக்கிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பல பொருட்களின் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து, உப்பு முதல் கார் வரை, பெரும்பாலான பொருட்களின் விலை குறையும்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 12, 28 ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட்டு 5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி., விகிதத்தை குறைக்க அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் ஆதரவு தெரிவித்தனர்.  பொதுமக்கள் தினசரி பயன்படுத்தும் பொருட்களின் விலை குறைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கடுமையாக ஆராயப்பட்டு பெரும்பாலான பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. அதிக பணியார்களைக் கொண்ட துறைகளுக்கு வலுவான ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. 

இந்த முடிவால், விவசாயிகள் பயனடைவர். விவசாயத் துறை பெரிதும் பயனடையும். நாட்டின் பொருளாதாரத்தில் சுகாதாரத்துக்கு முன்னுரிமை வழங்கும் விதமாக, காப்பீடு மற்றும் உயிர் காக்கும் மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டுள்ளது. புகையிலை உள்ளிட்ட பொருட்களுக்கான 40 சதவீத வரி விதிப்பு அமலாகும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

ஜி.எஸ்.டி., பதிவு செய்வது, தாக்கல் செய்வது, ரீபண்டு பெறுவது உள்ளிட்டவை எளிதாக்கப்பட்டுள்ளது. இழப்பீடு வரி குறித்து இன்னும் முடிவு எட்டப்படவில்லை. தற்போதைய சூழலில், வரும் அக்டோபர் 31ம் தேதி வரை இழப்பீடு செஸ் தொடரும். இதனால், புகையிலை பொருட்கள் மற்றும் சிகரெட்களுக்கு தொடர்ந்து 28 சதவீத வரியும் கூடுதலாக இழப்பீடு செஸ் வசூலிக்கப்படும். – என்று கூறினார். 

இந்த வருட தீபாவளிக்கு மக்களுக்கு பரிசு காத்திருப்பதாக பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தனது சுதந்திர தின உரையில் கூறியிருந்தார். அதன்படி ஜிஎஸ்டி வரியில் முக்கிய சீர்திருத்தங்கள் செய்ய மத்திய அரசு முடிவெடுத்ததாக தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன.

இந்நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “எனது சுதந்திர தின உரையின் போது, ஜிஎஸ்டியில் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான எங்கள் நோக்கம் குறித்து நான் பேசியிருந்தேன். சாதாரண மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதையும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ஜிஎஸ்டி சீர்திருத்தங்களுக்கான விரிவான திட்டத்தை மத்திய அரசு தயாரித்திருந்தது. மத்திய அரசு மற்றும் மாநிலங்களை உள்ளடக்கிய ஜிஎஸ்டி கவுன்சில், மத்திய அரசு சமர்ப்பித்த ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு மற்றும் சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுகளை கூட்டாக ஒப்புக்கொண்டுள்ளது. இது சாமானியர், விவசாயிகள், சிறு குறு தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயனளிக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பரந்த அளவிலான சீர்திருத்தங்கள் நமது குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் மற்றும் அனைவருக்கும், குறிப்பாக சிறு வணிகர்கள் மற்றும் வணிகங்களுக்கு வணிகம் செய்வதை எளிதாக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அது குறித்துப் பேசிய நிர்மலா சீதாராமன், ” அமெரிக்காவின் 50% வரி விதிப்புக்கும் ஜிஎஸ்டி சீர்திருத்த முடிவுக்கும் தொடர்பு இல்லை. இது குறித்து கடந்த 18 மாதங்களாக நாங்கள் ஆலோசித்து வந்தோம். அதன்படி, “5, 12, 18, 28 என நான்கு அடுக்காக இருந்த ஜிஎஸ்டி அடுக்குகளை 2 ஆக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 12, 28 ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்படுகின்றன. 5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது. மேலும் 5, 18 சதவீதத்துடன் சிறப்பு வரிவிதிப்பாக 40 சதவீத வரிவிதிப்பும் அமையும். இதைத்தவிர்த்து உயிர்காக்கும் மருந்துகளுக்கு 12% ஆக இருந்த வரி பூஜ்யமாக குறைகிறது. பால், பிரட், பன்னீர் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

அனைத்து மோட்டார் வாகன உதிரி பாகங்களுக்கும் 18 சதவீத வரி விதிக்கப்படும். டிராக்டர்கள், வேளாண் பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் 5 சதவீத வரி அடுக்குக்குள் கொண்டுவரப்படும். சாமானிய மக்களுக்கான பொருட்களுக்கு 5 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

ஜி.எஸ்.டி வரி விகிதத்தில் அதிரடி மாற்றங்கள்!

பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் GST வரிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன – முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

உயிர் காக்கும் மருந்துகள் மீது இனி ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படாது

பேண்டேஜ் போன்ற மருத்துவ உபகரணங்களுக்கு 5% வரி வசூலிக்கப்படும். (இதுவரை இத்தகைய பொருட்களுக்கு 12% வசூலிக்கப்பட்டது)

ஏசி, டிவி, கார் உள்ளிட்டவற்றுக்கு வரி 28 சதவீதத்தில் இருந்து 18% ஆக குறைப்பு

டிராக்டர், விவசாய உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைப்பு.

சாமானிய மக்களுக்கான பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி 5% ஆக குறைப்பு

UHT பால், ரொட்டி, சப்பாத்தி போன்ற பொருட்கள் மீது வரி கிடையாது

சோப், ஷாம்பூ, டூத் பேஸ்ட் மீது 5% வரி மட்டுமே வசூலிக்கப்படும்

விவசாய உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5%ஆக குறைப்பு

350CC இருசக்கர வாகனங்கள், சொகுசு கார்கள் மற்றும் தனியார் பயன்படுத்தும் விமானங்களுக்கு 40% ஜிஎஸ்டி வரி

அனைத்து மோட்டார் வாகன பாகங்களுக்கும் இனி 18% வரி வசூலிக்கப்படும்

9 ஆட்டோ வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதுவரை ஆட்டோ வாகனங்களுக்கு 28% வரி வசூலிக்கப்பட்டது.

நொறுக்கு தீனிகள், வெண்ணெய் போன்ற பொருட்கள் மீது தற்போது 18% வரி வசூலிக்கப்பட்ட நிலையில் இனி 12% வசூலிக்கப்படும்

பான் மசாலா, சிகரெட், குட்கா, ஜர்தா, கார்பனேட்டட் குளிர்பானங்கள், சோடா போன்றவற்றுக்கு 40% ஜிஎஸ்டி வரி.

புகையிலை பொருட்கள் மீதான வரி எப்போது அமலுக்கு வரும் என்பதை முடிவு செய்ய ஜிஎஸ்டி கவுன்சில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அதிகாரம் அளித்துள்ளது.

பிற பொருட்கள் மீதான புதிய ஜிஎஸ்டி வரிகள், செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகின்றன.

***

ஜிஎஸ்டி வரி விலக்கு விவரம் 

விவசாய பொருட்களுக்கான 18, 12% GST 5%ஆக குறைப்பு

விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் டிராக்டர் டயர் மற்றும் உதிரிப்பாகங்களுக்கு |விதிக்கப்பட்ட 18% ஜிஎஸ்டி, 5%ஆக குறைப்பு

டிராக்டர், மண்ணை பதப்படுத்துவதற்குப் பயன்படும் கருவிகள், சொட்டு நீர் & தெளிப்பு நீர் உள்ளிட்ட பொருட்களுக்கு 12%-யில் இருந்து 5% ஆக குறைப்பு!

மருந்துகள்: விலக்கு

33 உயிர்காக்கும் மருந்துகள், புற்றுநோய், அரிய நோய்கள் மற்றும் பிற கடுமையான நாள்பட்ட நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரியில் விலக்கு. முன்னர் 12%, 5% என்ற விகிதங்களில் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டது.

கணிசமாக குறைக்கப்பட்ட வரி விதிப்பு

மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் தெர்மோமீட்டருக்கு விதிக்கப்பட்ட 18% ஜி.எஸ்.டி 5% ஆக குறைப்பு!

உயிர்காக்கப் பயன்படுத்தப்படும் ஆக்ஸிஜன், நோய் கண்டறியும் உபகரணங்கள், குளுக்கோமீட்டர் & பரிசோதனை ஸ்ட்ரிப், பார்வை குறைபாடுகளுக்கான கண்ணாடிகளுக்கு 12%-யில் இருந்து 5% ஆக குறைப்பு!

எழுதுப்பொருள்கள்: விலக்கு

கல்வி சார்ந்த பொருட்களான பென்சில், ஷார்ப்னர், கிரேயான்ஸ், நோட்டுப்புத்தகம், எரேசர், வரைபடங்கள், சார்ட் உள்ளிட்டவற்றுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு. முன்னர் 12% வரை ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டது.

• இனி 5% மற்றும் 18% என 2 வரம்புகளில் மட்டுமே ஜிஎஸ்டி. 12% மற்றும் 28% வரி விகிதம் நீக்கம். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் புதிய சீர்திருத்தத்திற்கு ஒப்புதல். புதிய வரி விதிப்பு செப்டம்பர் 22ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

• தனி நபர் காப்பீடு, மருத்துவக் காப்பீட்டிற்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு. முன்னதாக 18% வரி விதிக்கப்பட்ட நிலையில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

• 18% To 5%: தினசரி மக்கள் பயன்படுத்தும் ஹேர் ஆயில், ஷாம்பு, டூத் பேஸ்ட், சோப்பு, ஷேவிங் கிரீம் உள்ளிட்டவற்றுக்கு 5% ஜிஎஸ்டி மட்டுமே வசூலிக்கப்படும்.

குறைகிறது சிமென்ட் விலை

• சல்பூரிக் ஆசிட், நைட்ரிக் ஆசிட் மற்றும் அமோனியா மீதான ஜிஎஸ்டி 18 ல் இருந்து 5 சதவீதமாக இருக்கும்

• புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான பாகங்கள் மீதான ஜிஎஸ்டி 12ல் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும்.

• டிராக்டர், விவசாயம், தோட்டக்கலை மற்றும் வனவியல் இயந்திரங்கள், அறுவடை மற்றும் கதிரடிக்கும் இயந்திரங்கள், உரம் தயாரிக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட விவசாய பொ ருட்கள் மீதான ஜிஎஸ்டி 12 ல் இருந்து 5 சதவீதமாக குறைப்பு

• கைவினை பொருட்கள், பளிங்கு, கிரானைட், தோல் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 12ல் இருந்து 5 சதவீதம்

• சிமென்ட் மீதான ஜிஎஸ்டி வரி 28ல் இருந்து 18 ஆக குறைப்பு

நூல் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு

• டிரக்குகள், பஸ்கள், ஆம்புலன்ஸ்கள் மீதான ஜிஎஸ்டி 28 ல் இருந்து 18 சதவீதமாக குறைப்பு

• மூன்று சக்கர வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி 28 ல் இருந்து 18 சதவீதமாக இருக்கும்

• ஜவுளித்துறையை பொறுத்தவரை மனிதர்களால் உருவாக்கப்பட்ட பைபர் மீதான ஜிஎஸ்டி 18 ல் இருந்து 5 சதவீதமாக குறைப்பு

• மனிதர்களால் உருவாக்கப்பட்ட நூல் மீதான ஜிஎஸ்டி 12ல் இருந்து 5 சதவீதமாக குறைப்பு

மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும்..!

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் என பிரதமர் மோடி கருத்து. சிறுவணிகர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் வணிகம் செய்வதை எளிமையாக்கும் என்றும் உறுதி

எவற்றுக்கெல்லாம் 5% ஜிஎஸ்டி வரி?

ஹேர் ஆயில்கள், டாய்லட் சோப்கள், சோப் பார்கள், ஷாம்பூக்கள், டூத் பேஸ்ட்கள், சைக்கிள்கள், மேஜை பொருட்கள், அடுப்பு உபயோக பொருட்கள், வீட்டு உபயோக பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைப்பு

நொறுக்குத்தீனி, சாஸ், பாஸ்தா, இன்ஸ்டான்ட் நூடுல்ஸ், சாக்லேட், காபி, கார்ன்பிளேக்ஸ், வெண்ணெய், நெய், பழச்சாறுகள், சோயா பால், பதப்படுத்தப்பட்ட இறைச்சி ஆகியவற்றுக்கு 5 சதவீதமாக ஜிஎஸ்டி வரி குறைப்பு

• ரூ.100 மற்றும் அதற்கும் குறைவான விலை கொண்ட சினிமா டிக்கெட் மீதான ஜிஎஸ்டி 12%லிருந்து 5%ஆக குறைப்பு.

ரூ.100க்கும் அதிகமான டிக்கெட்களுக்கு வசூலிக்கப்பட்டு வரும் ஜிஎஸ்டி 18%-ஆகவே தொடர்கிறது.

 பைக், கார்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு

350 சிசிக்கு குறைவாக உள்ள பைக்குகள், 1,200 சிசிக்கு குறைவாக உள்ள கார்களுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதமாக குறைப்பு

அனைத்து வாகன உதிரி பாகங்களுக்கான வரியும் 18 சதவீதமாக குறைத்து நடவடிக்கை

மற்ற வரி விலக்கு விவரம்

• யுஹெச்டி (UHT), பால், பனீர், பீஸா, ரொட்டி, சப்பாத்தி மற்றும் பிரட் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

• மருத்துவ காப்பீடுகளுக்கு ஜகாப்பீடுகளுக்கு.

40 சதவீதம் ஜிஎஸ்டி விதிப்பு

சிகரெட், குட்கா, குளிர்பானங்கள், பான் மசாலா, புகையிலைப் பொருட்களுக்கு 40 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பு.

தனி நபர் விமானங்கள், ரேஸ் கார்கள், விளையாட்டு போட்டி டிக்கெட்டுகள், மது அல்லாத பானங்கள் உள்ளிட்டவைக்கும் 40% வரி

லாட்டரி-சூதாட்டத்துக்கு 40 சதவீத GST

லாட்டரி, குதிரைப்பந்தயம், கேசினோக்கள், ஆன்லைனில் பணம் வைத்து விளையாடுதல் உள்ளிட்டவைகளுக்கு 40 சதவீத ஜி.எஸ்.டி பொருந்தும் என அறிவிப்பு.

ஐபிஎல் போன்றவற்றிற்கு விதிக்கப்படும் 40 சதவீத ஜி.எஸ்.டி, அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு நிகழ்ச்சிக்கான நுழைவுகளுக்கு பொருந்தாது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories