திருவோணம் விழா சபரிமலை கோவில் செப் 3-நடை திறப்பு..

Published:

1000890601 - 2026

உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்3ல் நடை திறக்கப்பட்டு செப் 4முதல் 7ஆம் தேதி வரை நடை திறந்து பூஜை வழிபாடுகள் நடைபெறும்.நான்கு நாள் திருவோணம் பண்டிகை நாட்களில் பக்தர்களுக்கு திருவோண விருந்து உபசரிப்பு வழங்கப்படும்.

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். கேரளாவில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை வருகிற 5-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். 4-ந் தேதி அதிகாலை 5 மணி முதல் வழக்கமான பூஜை வழிபாடுகள் நடைபெறும். 5-ந் தேதி திருவோண சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

தொடர்ந்து 7-ந் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு 4, 5, 6 7ஆகிய 4 நாட்கள் ஐய்யப்ப பக்தர்களுக்கு ஓண சத்யா (விருந்து) வழங்கப்படும். ஓணத்தையொட்டி, சபரிமலை சன்னிதானத்தில் பிரமாண்ட அத்தப்பூ கோலம் அமைக்கப்பட உள்ளது.

07/09/2025 அன்று சந்திர கிரகணம்-

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

07/09/2025 அன்று இரவு 9.50 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கும் என்பதால், இந்த முறை ஓணம் பூஜைகளுக்குப் பிறகு, சபரிமலை திருநடை 07/09/2025 அன்று இரவு 8.50 மணிக்கு ஹரிவராசன பூஜை நடத்தி இரவு 9 மணிக்கு மூடப்படும். இந்த நேர மாற்றம் தந்திரி அறிவுறுத்தலின் படி மாற்றம் செய்ய பட்டுள்ளது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img