சபரிமலை புதிய மேல்சாந்தி தேர்வு! வழக்கத்துக்கு மாறாக பக்தர்கள் கூட்டம்!

Published:

sabarimala melsandh 25 26i - 2026

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் இன்று ஐப்பசி மாத பூஜை வழிபாடுகள் தொடங்கியது. வழக்கமாக மாத பூஜைக்கு எதிர்பார்த்ததைவிட இம்முறை மிக அதிக அளவில் பக்தர்கள் வந்ததாலும் மழை தொடர்ந்து பெய்ததாலும் சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த பெரும் சிரமம் நிலவியது. 

இந்த நிலையில் சபரிமலையில் இன்று காலை உஷபூஜை முடிந்ததும் 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான புதிய மேல் சாந்தி தேர்ந்தெடுப்பு நடைபெற்றது. சபரிமலை புதிய மேல் சாந்தியாக திருச்சூர் மாவட்டம் சாலக்குடி பிரசாத் என்பவரும் மளிகைபுரம் புதிய மேல் சாந்தியாக மனோ நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 14 பேரும், மாளிகைபுரம் கோவிலுக்கு 13 பேரும் நேர்காணல் மூலமாக  தேர்வு செய்யப்பட்டனர்.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொ தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் திறந்திருக்கும். அதன்படி தற்போது ஐப்பசி மாத பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது.

கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்தார். நேற்றைய தினம் சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இன்று முதல் வருகிற 22-ந்தேதி வரை வழக்கமான பூஜைகள் நடைபெறும்.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் சபரிமலை ஐயப்பன் கோவில் மற்றும் மாளிகைபுரம் கோவிலுக்கான புதிய மேல்சாந்திகள் தேர்வு காலை 8 மணிக்கு நடைபெற்றது.

ஐயப்பன் கோவிலுக்கு 14 பேரும், மாளிகைபுரம் கோவிலுக்கு 13 பேரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் பெயர்கள் தனித்தனி குடங்களில் போடப்பட்டு குலுக்கல் முறையில் தேர்வு நடைபெற்றது.

ஐயப்பன் கோவில் மேல்சாந்தி தேர்வுக்கான சீட்டை பந்தளம் அரண்மனை பிரதிநிதி காஷ்யப் வர்மா எடுத்தார். அதில் சபரிமலை மேல்சாந்தியாக சாலக்குடியை சேர்ந்த பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது இவர் ஆரேஸ்வரம் ஸ்ரீதர்மசாஸ்தா ஆலயத்தின் மேல்சாந்தியாக உள்ளார்.

இதேபோல் மாளிகைபுரம் கோவில் மேல்சாந்தி தேர்வுக்கான சீட்டை பந்தளம் அரண்மனை பிரதிநிதியான மைதிலி என்ற சிறுமி எடுத்தார். அதில் கொல்லம் மய்யநாட்டை சேர்ந்த மனு நம்பூதிரி மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதிய மேல்சாந்திகள் இருவரும் நடப்புஆண்டு மண்டல பூஜை சீசன் முதல் ஒரு வருட காலத்திற்கு சபரிமலையில் தங்கியிருந்து பூஜைகள் மற்றும் திருப்பணிகளை மேற்கொள்வார்கள். மண்டல பூஜை தொடங்குவதற்கு முன்னதாக அவர்கள் மேல்சாந்தியாக வரும் நவ. 16ல் பொறுப்பேற்பார்கள்.

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!

தற்போது, சபரிமலை ஐயப்பன் கோயிலில் புதிய மேல் சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரசாத் இ.டி., ஆரஷ்வரம் சாஸ்தா கோயிலின் தலைமை அர்ச்சகராக பணியாற்றுகிறார்.

மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் அவர் தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தினார், “நான் மேல்சாந்தி பதவிக்கு விண்ணப்பிப்பது இது மூன்றாவது முறை. பகவான் என் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டதில் நான் உண்மையிலேயே பாக்கியவானாக உணர்கிறேன்” என்று கூறினார்.

sabarimala pandalam royal family children - 2026

முன்னதாக, பந்தளம் அரச குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள், காஷ்யப் வர்மா மற்றும் மைதிலி கே வர்மா ஆகியோர் அக்டோபர் 18, சனிக்கிழமை சபரிமலை மற்றும் மாளிகப்புரத்திற்கான மேல்சாந்திகளைத் தேர்ந்தெடுப்பதற்கான குடவோலை முறையில் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அவர்கள் இந்த மேல்சாந்தி தேர்வில் பங்கேற்றார்கள்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img