
உலக பிரசித்தி பெற்ற கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பம்பை நதிக்கு மேல் உயர்ந்த மலை அடர்ந்த வனப்பகுதியில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் இந்த ஆண்டு மண்டல பூஜை மஹோற்சவ விழாவுக்கு பக்தர்கள் சரணஹோஷம் முழங்க ஞாயிற்றுக்கிழமை மாலை நடை திறந்து வைக்கப்பட்டது.நாளை திங்கட்கிழமை கார்த்திகை முதல் நாள் 41நாள் மண்டல பூஜை வழிபாடுகள் சபரிமலை ஐயப்பனுக்கு தொடங்குகிறது .மண்டல பூஜையை யொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.
சபரிமலையில் இவ்வருட மண்டல கால பூஜைகள திங்கட்கிழமை 17ம் தேதி முதல் தொடங்குகிறது. இதை முன்னிட்டு கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு தந்திரி முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் திறந்து வைத்தார். பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது சபரிமலை நடை திறக்கப்பட்டதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முதல் நாளிலேயே ஐயப்பனை தரிசிக்க இருமுடி கட்டி சபரிமலைக்கு வருகை தந்திருந்தனர் இவர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர் . இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. தீபாராதனைக்கு பின்னர் புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .
சபரிமலை மேல்சாந்தியாக பிரசாத்தும், மாளிகைப்புரம் மேல்சாந்தியாக மனு நம்பூதிரியும் கடந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். கார்த்திகை 1ம் தேதியான நாளை (17ம் தேதி) முதல் அடுத்த ஒரு வருடத்திற்கு சபரிமலையில் இந்த புதிய மேல்சாந்திகள் தான் முக்கிய பூஜைகளை நடத்துவார்கள். டிசம்பர் 27ம் தேதி பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது. அன்றுடன் 41 நாள் மண்டல காலம் நிறைவடையும்.
தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த இரு வாரங்களுக்கு முன் தொடங்கியது. நாளை முதல் டிசம்பர் 1ம் தேதி வரை 16 நாட்களுக்கான முன்பதிவு முடிந்து விட்டது. இதுவரை 22 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.தினமும் ஆன்லைன் மூலம் 70 ஆயிரம் பக்தர்களும் நேரடியாக பம்பை நிலக்கல் பகுதியிலிருந்து ஸ்பாட் புக்கிங் ஆக 20 ஆயிரம் பக்தர்களும் பதிவு செய்து 90 ஆயிரம் பக்தர்கள் ஐயப்பனை தினமும் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேரள டிஜிபி ரவடா சந்திரசேகர் கூறியதாவது, சபரிமலையில் மண்டல காலத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைவடைந்து விட்டன. மொத்தம் 6 கட்டங்களாக 18,741 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். நிலக்கல், பம்பை, சன்னிதானம் என மூன்று மண்டலங்களாக பிரித்து தலா ஒரு எஸ்பி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏடிஜிபி ஸ்ரீஜித் மேற்பார்வையில் டிஐஜிகளான அஜீதா பேகம், சதீஷ் பினோ மற்றும் பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டயம் மாவட்ட எஸ்பிக்களான ஆனந்த், சாபு மேத்யூ, சாகுல் அமீது ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்காக ஏஐ கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைகள் நாளை திங்கட்கிழமை தொடங்குகின்றன.அன்று முதல் தினமும் 18 மணிநேரம் நடை திறந்திருக்கும். அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்படும். பின்னர் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு நடை சாத்தப்படும். பக்தர்கள் வருகை அதிகரித்தால் இரவு நடை சாத்தப்படும் நேரம் கூட்டப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

சபரிமலை புதிய மேல்சாந்தியாக சாலக்குடியை சேர்ந்த பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஆரேஸ்வரம் ஸ்ரீதர்மசாஸ்தா ஆலயத்தின் மேல்சாந்தியாக இருந்து தற்போது சபரிமலை ஐயப்பன் கோவில் மேல்சாந்தி யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இதேபோல் மாளிகைபுரம் கோவில் புதிய மேல்சாந்தியாக கொல்லம் மய்யநாட்டை சேர்ந்த மனு நம்பூதிரி மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புதிய மேல்சாந்திகள் இருவரும் இருமுடி கட்டி இன்று சபரிமலை வந்தடைந்தனர்.இவர்களை சபரிமலை தற்போதைய தந்திரி மேல்சாந்தி வரவேற்று பதிவியேற்று வைத்தனர்.நடப்புஆண்டு மண்டல பூஜை சீசன் முதல் ஒரு வருட காலத்திற்கு சபரிமலையில் தங்கியிருந்து பூஜைகள் மற்றும் திருப்பணிகளை இவர்கள் மேற்கொள்வார்கள். நாளை மண்டல பூஜை தொடங்குவதற்கு முன்னதாக அவர்கள் மேல்சாந்தியாக இன்று பொறுப்பேற்றனர்.




