Ind Vs SA Test: சொதப்பலாக முடிந்த முதல் டெஸ்ட்!

ind vs sa test - 2026

இந்தியா- தென் ஆப்பிரிக்கா – முதல் டெஸ்ட் – கொல்கொத்தா –
இந்திய அணியின் பரிதாபத் தோல்வி 16.11.2025

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்க்ஸ் (159, மர்க்ரம் 31, முல்டர் 24, டோனி டி ஸோரி 24, ரியன் ரிக்கில்டன் 23, பும்ரா 5/27, சிராஜ் 2/47, குல்தீப் 2/36, அக்சர் படேல் 1/21) இரண்டாவது இன்னிங்க்ஸ் (பவுமா ஆட்டமிழக்காமல் 55, காபின் போஷ் 25, ஜதேஜா 4/50, குல்தீப் 2/30, சிராஜ் 2/2, பும்ரா 1/24, அக்சர் 1/36) இந்திய அணி முதல் இன்னிங்க்ஸ் (189, கே.எல். ராகுல் 39, வாஷிங்க்டன் சுந்தர் 29, பந்த் 27, ஜதேஜா 27, சைமன் ஹார்மர் 4/30, மார்கோ ஜேன்சன் 3/35, கேசவ் மஹராஜ் 1/66, காபின் போஷ் 1/32) இரண்டாவது இன்னிங்க்ஸ் (93, வாஷிங்க்டன் சுந்தர் 31, அக்சர் படேல் 26, ஜதேஜா 18, சைமன் ஹார்மர் 4/21, கேசவ் மஹராஜ் 2/37, மார்கோ ஜேன்சன் 2/15, மர்க்ரம் 1/5) தென் ஆப்பிரிக்க அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ALSO READ:  IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்த ஆட்டத்தின் தொடக்க நாள் முதலே தெ ஆப்பிரிக்க அணி தடுமாறியது. நேற்று மாலை வரை இந்திய அணி நிச்சயமாக வெல்லும் என்ற நிலைதான் இருந்தது. ஆனால் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய பேட்டர்கள் 124 ரன்கள் எடுக்க முடியாமல் இந்த முதல் டெஸ்டில் தோற்றுப் போனார்கள். இந்திய அணியின் திறமையான பேட்டர்களான ஜெய்ஸ்வால் இரண்டு இன்னிங்க்ஸிலும் (12 & 0) சரியாக ஆடவில்லை. கே.எல். ராகுல் இரண்டாவது இன்னிங்க்ஸில் 6 பந்து விளையாடி 1 ரன் எடுத்தார். துருவ் ஜுரல் இரண்டு இன்னிங்க்ஸிலும் 13 மற்றும் 14 ரன் எடுத்தார். இந்த நிலையில் இந்திய அணி எப்படி வெற்றிபெற முடியும்? 

இந்திய விளையாட்டு தளங்களை சுழல் பந்து சாதகமாக அமைக்கும்போது இந்திய அணி பேட்டர்கள் சுழல் பந்தை திறமையாக ஆடவும் செய்ய வேண்டும். டெஸ்டில் களத்தில் எத்தனை நேரம் ஆட்டமிழக்காமல் நிற்கிறார்கள் என்பதைப் பொறுத்தே வெற்றி தோல்வி அமையும். தென் ஆப்பிரிக்க அணியின் அணித்தலைவர் 136 பந்துகள் ஆடி ஆட்டமிழக்காமல் 55 ரன்கள் எடுத்தார். இது அவர்களது அணியின் வெற்றிக்கு அடிகோலியது. இந்திய அணியில் வாஷிங்க்டன் சுந்தர் மட்டுமே 92 பந்துகள் ஆடினார். அணி வெற்றி பெறா வேண்டிய நிலையில் மிக மோசமாக ஆடிக்கொண்டிருந்தபோது ரிஷப் பந்த், ஜதேஜா போன்றவர்கள் நிலைத்து ஆடாமல் ஆட்டமிழந்தது துரதிருஷ்டவசமானது. 

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

அடுத்த டெஸ்டில் தங்களது தவறுகளை இந்திய அணி திருத்திக்கொள்ளுமா எனப் பார்க்கலாம்.   

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories