விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது; சரத்குமார்

sarathkumar anandan ayyasamy tenkasi - 2026

நடிகர் விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாற சாத்தியமில்லை.என புளியங்குடியில் நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.

புளியங்குடியில் நடிகர் விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாற சாத்தியமில்லை.பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நடிகர் விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாற சாத்தியமில்லை. ஏனென் றால் நான் பிரசாரம் செய்த காலத்தில் எனக்கு கூடிய கூட்டம் வாக்குகளாக மாறி இருந்தால் நிச்சயம் அந்த கட்சிகளுக்கு வெற்றி கிடைத்திருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை. நடிகர் ரஜினிகாந்த், நடிகர் அஜித் ஆகியோர் சென்றால் அதைவிட அதிக கூட்டம் வரும்.

இன்று என்னை வரவேற்பதற்கு கூட அதிக அளவில் கூட்டம் கூடியது. தென்னிந்தியாவின் மதகலவரங்கள் வந்தது கிடையாது. மக்களை திசை திருப்புவதற்காக தவறான தகவல்களை கூறுகின்றனர். சிலர்

100 நாள் வேலை திட்டத்தை 125 நாளாக அதிகரித்ததற்கும் தி.மு.க. கூட்டணி கட்சி போராட்டம் நடத்துகிறது. ஒரு மாநிலம் இதை சிறப்பாக செயல் படுத்த முடியும்.

தென்காசி தொகுதியில் நான் நிற்பது குறித்து தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும். அதன்பின்னர் போட்டியிட வேண்டுமா? வேண்டாமா என நான் முடிவு செய்ய வேண்டும். அது குறித்து 2 மாதம் கழித்து தான் கூற முடியும்.

நடிகராகிய நான் அடிக்கடி வரும் போது என்னை பார்க்க பெருங் கூட்டம் வருகிறது. அப்படி என்றால் வெளியே வராத மக்களை எப்போதுமே நேரில் சந்திக்காத நடிகர் ஒருவர் தெருவில் கூட்டம் வரும்போது அதிகமாக தான் வரும்.

தேர்தல் நேரத்தில் பா.ஜ.க.வின் சி-டீம் என தேவையில்லாமல் பேசுவது வழக்கமாகி விட்டது. தமிழக வெற்றிக் கழகத்துடன் பா.ஜ.க. கூட்டணி வைக்கவாய்ப்பில்லை கருதுகிறேன். அ.தி. மு.க.வினர் அனைவரும் இணைந்தால் நல்லது என்று ந தொடர்ந்து கூறி வருகிறேன்.

இந்த தேசத்தை சிறப்பாக வழி நடத்தக்கூடிய தலைவர் நமக்கு கிடைத்துள்ளார். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தேசத்தை வளர்ச்சி கொண்டு பாதைக்கு செல்ல வேண்டும். தமிழகத்தில் பா.ஜ.க. வேக மாக வளர்ந்து வருகிறது.

அவர் இவ்வாறு கூறினார். பேட்டியின்போது தென்காசி மாவட்ட பா.ஜ.க. தலைவர் ஆனந்தன் அய்யாசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories