தை பொங்கல் -மெமு சிறப்பு ரயில் இயக்க பொது மக்கள் கோரிக்கை..

1001171078 - 2026


தைத்திருநாளையொட்டி முன் பதிவில்லாத பகல் நேர மெமு சிறப்பு இரயில்களை இயக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் வரும் ஜனவரி 15ஆம் தேதி தைப் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் கடந்த நவ.,14 இல் தைத் திருநாளுக்கான இரயில் முன் பதிவு தொடங்கியது. பதிவு துவங்கிய 10 நிமிடங்களில் அனைத்து முன் பதிவு டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. பலர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.
இதனால் ஏராளமான பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே, முன் பதிவற்ற பகல் நேர மெமு இரயில்களை இயக்கிட வேண்டுமென ஏராளமானோர் இரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் தங்களது பணி நிமித்தமாக சென்னை, கோவை, திருப்பூர் ஆகிய பகுதிகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும், பொங்கல் திருநாளை தங்களது சொந்த ஊரில் குடும்பத்துடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும், தென் மாவட்டங்களில் மதுரை, சிவகங்களை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் தைப் பொங்கலை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுக்களான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு ஆகியவை நடைபெறுவது வழக்கம். இதனைக் கண்டு களிக்கவும் ஏராளமான பொது மக்கள் ஆர்வத்துடன் ஆண்டுதோறும் சென்று வருகின்றனர்.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!


கடந்த ஆண்டு, தீபாவளி பண்டிகை மற்றும் தைத்திருநாளையொட்டி சென்னை-மதுரை, சென்னை-திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கு பகல் நேர சிறப்பு மெமு ரயில்களை இரயில்வே நிர்வாகம் இயக்கியது.
ஆகவே, சென்னை -செங்கோட்டை சென்னை-தூத்துக்குடி, சென்னை-கோவை, கோவை-தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய பகுதிகளுக்கு மெமு சிறப்பு இரயில்களை இயக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, இரயில்வே நிர்வாகமானது, ஜனவரி 10 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை சிறப்பு இரயில்களை இயக்குவதற்கான முன் அறிவிப்புகளை வெளியிட வேண்டுமென பயணிகள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories