செங்கோட்டை புனலூர் வழியாக ரயில் சேவை தொடக்கம்!

Published:

railwaystation - 2026
SONY DSC

செங்கோட்டை புனலூர் வழியாக ரயில் சேவை வெள்ளிக்கிழமை நாளை தொடங்குகிறது.

தாம்பரம் – கொல்லம் – தாம்பரம் இடையேயான சிறப்பு ரயில் ஒன்று, கடையநல்லூர், செங்கோட்டை, புனலூர் வழியாக இயக்கப்படுகிறது.

சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாக, மக்கள் அதிகம் எதிர்பார்த்த செங்கோட்டை – புனலூர் அகல ரயில் பாதையில் நாளை தாம்பரம் – கொல்லம் – தாம்பரம் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

வண்டி எண்: 06027, தாம்பரம் – கொல்லம் சிறப்பு ரயில் மார்ச் 30ம் தேதி (வெள்ளி) அன்று, தாம்பரத்திலிருந்து மாலை 05.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 05.50க்கு செங்கோட்டை வந்து கொல்லத்திற்கு காலை 10.30 மணிக்கு போய் சேரும்.

வண்டி எண்: 06028, கொல்லம் – தாம்பரம் சிறப்பு ரயில் மார்ச் 31ம் தேதி (சனி) அன்று, கொல்லத்திலிருந்து மதியம் 01.00 மணிக்கு புறப்பட்டு, அன்று மாலை 04.55 மணிக்கு செங்கோட்டை வந்து, மறுநாள் காலை 05.00 மணிக்கு தாம்பரம் போய் சேரும்.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம் , விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, பகவதிபுரம், தென்மலை, எடமண், புனலூர், அவனீஸ்வரம், கொட்டாரக்கரை ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி ரூ. 235/- படுக்கை வசதி ரூ.490/- மூன்று டயர் குளிர்சாதன வசதிப் பெட்டியில் ரூ.1340/-  என கட்டணங்கள் உள்ளன. இது தாம்பரத்தில் இருந்து கொல்லம் வரையிலான கட்டணம் என்று செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சார்பில் கே.எச். கிருஷ்ணன் கூறினார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img