சென்னை: உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வரும் மாநில அறநிலையத் துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் வசம் இருந்த இந்து சமய அறநிலையத் துறை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வசம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தூர் பாண்டியன் திடீரென மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போது அவர் வசம் இருந்த இந்துசமய அறநிலையத் துறை, உணவுத் துறை அமைச்சர் காமராஜூக்கு கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இலாகா இல்லாத அமைச்சராக செந்தூர் பாண்டியன் நீடிப்பார் என்று ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்டசெய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Read this news article in other Bharathiya Languages
அறநிலையத் துறை கூடுதல் பொறுப்பு அமைச்சர் காமராஜிடம் ஒப்படைப்பு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari