5ம் தேதி நடைப் பயணத்தை ரத்து செய்கிறார் வைகோ!

Published:

vaiko in kl airport - 2026

மதுரை: திமுக.,வின் முழு அடைப்புப் போராட்டத்தை ஆதரித்து 5ஆம் தேதி நடைபயணம் ரத்து செய்யப் படுவதாக வைகோ அறிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பில் மத்திய அரசைக் கண்டித்து திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்துக்கு மதிமுக., ஆதரவளிக்கும் என்று கூறியிருந்தார் வைகோ. இந்நிலையில், முழு அடைப்புப் போராட்டத்தை திமுக., ஏப். 5ம் தேதி நடத்துகிறது. இந்தப் போராட்டத்தை ஆதரித்து, தனது 5ம் தேதி நடைப்பயணத்தை ரத்து செய்துள்ளார் வைகோ.

கர்நாடகாவில் பாஜக அழிந்துவிடும் என்பதால் வாரியம் அமைக்க அஞ்சுகிறார் மோடி என்று தெளிவாகக் கூறிய வைகோ,  மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதால் காவிரி வாரியம் அமைக்கப்படவில்லை;இரண்டு அணைகளைக் கட்டி தமிழகத்தை அழிக்கப்பார்க்கிறது என்று திமுக., கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் ஆளும் கர்நாடக முதல்வருக்கு கண்டனம் தெரிவிப்பதற்கு பதிலாக பிரதமர் மோடியை குற்றம் சாட்டியுள்ளார் வைகோ.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img