பொய்ச் செய்தி வெளியிட்டால் அங்கீகாரம் ரத்து! அமைச்சக ஆணையை ரத்து செய்தது அரசு!

smriti irani - 2026

புது தில்லி: பொய்ச் செய்தி வெளியிட்டால், பத்திரிகையாளர்களின் அங்கீகாரம் ரத்து செய்யப் படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. இது பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய நேரத்தில், மத்திய அரசு அந்த உத்தரவை ரத்து செய்தது.

பத்திரிகைகளில் வெளியானது பொய்ச் செய்தி என்கிற சந்தேகம் ஏற்பட்டால் அந்தச் செய்தி பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் பரிசீலனைக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான செய்தி பொய் என்ற சந்தேகம் ஏற்பட்டால், நியுஸ் பிராட்காஸ்டர்ஸ் அசோசியேஷன் பரிசீலனைக்கு அனுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒரு செய்தி, பொய்யானது என்று அளிக்கப்படும் புகாருக்கு உள்ளாகும் செய்தியை 15 நாட்களுக்குள் ஆய்வு செய்து பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா மற்றும் நியுஸ் பிராட்காஸ்டர்ஸ் அசோசியேஷன் முடிவை அறிவிக்க வேண்டும். ஒரு செய்தி பொய்யானதுதானா என்று ஆய்வுக்கு உட்பட்டிருக்கும் போது அந்த செய்தியை அளித்த பத்திரிகையாளர்களின் அரசு அங்கீகாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கும்.

ஒரு செய்தி தவறானது அல்லது பொய்யானது என்பது உறுதிப்படுத்தப் பட்டால் அந்த செய்தியை வெளியிட்ட செய்தியாளரின் அங்கீகாரம் முதல் முறை 6 மாதங்களுக்கு சஸ்பென்ட் செய்யப்படும். இரண்டாவது மற்றும் மூன்றாவது முறையும் அதே செய்தியாளர் பொய்யான செய்தியை வெளியிட்டால், அவரது அரசு அங்கீகாரம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.

இப்படி மத்திய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இன்று புதிய அறிவிப்பை திடீரென வெளியிட்டது. இது பெரிய அளவில் இன்று காலை ஊடகங்களில் விவாதிக்கப் பட்டது.

இந்நிலையில், தவறான செய்தி வெளியிட்டால் செய்தியாளர் அங்கீகாரம் ரத்து என்ற ஆணை திரும்பப் பெறப் பட்டுள்ளதாக அமைச்சகம் கூறியது. மத்திய செய்தித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி வெளியிட்ட ஆணையை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

ஆங்கில மற்றும் இந்தி ஊடகங்கள் மட்டுமல்லாது, இந்தியாவில் பல்வேறு  ஊடகங்களிலும் தவறான உள்நோக்கம் கொண்ட தகவல்கள் குறிப்பாக மத்திய அரசையும், பிரதமரையும் அவதூறு கிளப்பும் வகையில் செய்திகள் வெளியிடப் பட்டு வருகின்றன என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கலாம் என்று கருதப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories