பொய்ச் செய்தி வெளியிட்டால் அங்கீகாரம் ரத்து! அமைச்சக ஆணையை ரத்து செய்தது அரசு!

smriti irani - 2026

புது தில்லி: பொய்ச் செய்தி வெளியிட்டால், பத்திரிகையாளர்களின் அங்கீகாரம் ரத்து செய்யப் படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. இது பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய நேரத்தில், மத்திய அரசு அந்த உத்தரவை ரத்து செய்தது.

பத்திரிகைகளில் வெளியானது பொய்ச் செய்தி என்கிற சந்தேகம் ஏற்பட்டால் அந்தச் செய்தி பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் பரிசீலனைக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான செய்தி பொய் என்ற சந்தேகம் ஏற்பட்டால், நியுஸ் பிராட்காஸ்டர்ஸ் அசோசியேஷன் பரிசீலனைக்கு அனுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒரு செய்தி, பொய்யானது என்று அளிக்கப்படும் புகாருக்கு உள்ளாகும் செய்தியை 15 நாட்களுக்குள் ஆய்வு செய்து பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா மற்றும் நியுஸ் பிராட்காஸ்டர்ஸ் அசோசியேஷன் முடிவை அறிவிக்க வேண்டும். ஒரு செய்தி பொய்யானதுதானா என்று ஆய்வுக்கு உட்பட்டிருக்கும் போது அந்த செய்தியை அளித்த பத்திரிகையாளர்களின் அரசு அங்கீகாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கும்.

ஒரு செய்தி தவறானது அல்லது பொய்யானது என்பது உறுதிப்படுத்தப் பட்டால் அந்த செய்தியை வெளியிட்ட செய்தியாளரின் அங்கீகாரம் முதல் முறை 6 மாதங்களுக்கு சஸ்பென்ட் செய்யப்படும். இரண்டாவது மற்றும் மூன்றாவது முறையும் அதே செய்தியாளர் பொய்யான செய்தியை வெளியிட்டால், அவரது அரசு அங்கீகாரம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.

ALSO READ:  கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

இப்படி மத்திய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இன்று புதிய அறிவிப்பை திடீரென வெளியிட்டது. இது பெரிய அளவில் இன்று காலை ஊடகங்களில் விவாதிக்கப் பட்டது.

இந்நிலையில், தவறான செய்தி வெளியிட்டால் செய்தியாளர் அங்கீகாரம் ரத்து என்ற ஆணை திரும்பப் பெறப் பட்டுள்ளதாக அமைச்சகம் கூறியது. மத்திய செய்தித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி வெளியிட்ட ஆணையை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

ஆங்கில மற்றும் இந்தி ஊடகங்கள் மட்டுமல்லாது, இந்தியாவில் பல்வேறு  ஊடகங்களிலும் தவறான உள்நோக்கம் கொண்ட தகவல்கள் குறிப்பாக மத்திய அரசையும், பிரதமரையும் அவதூறு கிளப்பும் வகையில் செய்திகள் வெளியிடப் பட்டு வருகின்றன என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கலாம் என்று கருதப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Topics

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories