காவிரிக்காக அதிமுக., வினர் நடத்திய ‘உண்ணும்’விரதம்

Published:

IMG 20180403 WA0004 - 2026

காவிரிக்காக அதிமுக., வினர் நடத்திய ‘உண்ணும்’விரதம் போராட்டம் இது. வேலூரில் காவிரிக்காக உண்ணாவிரதம் என்ற பெயரில் உண்ணும் விரதம் இருக்கும் அதிமுகவினர், மோர், சமோசா நொறுக்குத் தீனியுடன் லஞ்ச் ப்ரேக் விடப்பட்ட போது எடுத்த படம் வைரலாகி வருகிறது.

நடனத்துடன் அதிமுக உண்ணாவிரதம் களைகட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.  உண்ணாவிரதப் போராட்டத்தை வேர்க்கடலை, மோர், சமோசா என நொறுக்குத் தீனியுடன் செமையாக அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த உண்ணாவிரப் போராட்டத்தில் சினிமா பாடலுக்கு நடனம் ஆடி, ஆட்டம் கூத்து என்று கட்சி விழா மேடை போல, எதற்கும் பஞ்சமில்லாமல் போனதால் தொண்டர்கள் உற்சாகமாகக் காணப்படுகின்றனர். உணர்ச்சி மிக்க போராட்டம் ஜாலியான போராட்டமாக மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img