என்னை விட சிறந்த நடிகர் ஜெயக்குமார்: திருச்சி மாநாட்டில் கமல்

kamal in trichy 1 - 2026

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கமல் பேசியதாவது:

காவிரி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என சாக்குபோக்கு சொல்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளாக குழப்பமும் பேராசையும் அதிகரித்துள்ளது. பல நூறு ஆண்டுகளாக காவிரியில் உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. காவிரியில் காலம் காலமான நமது உரிமையை அரசியல்வாதிகள் தட்டிப்பறிக்கின்றனர்.

காவிரியில் மத்திய அரசு செய்வது தவறு. மத்திய அரசை அவமரியாதை பேசுவதை நாங்கள் செய்ய மாட்டோம். மீண்டும் கோரிக்கை வைத்து உறங்குவர்களை எழுப்பலாம் உறங்குபவர்களை போல நடிப்பவர்களை எழுப்பவே முடியாது

கலவரங்கள் மூலம் திசை திருப்பினாலும் திசை திரும்பமாட்டோம். காவிரி பிரச்சனையை திசை திருப்பாதீர்கள்- திசை திரும்பமாட்டோம். காவிரி மேலாண்மை வாரியம் இல்லையெனில் தமிழகம் ஒத்துழைக்க மறுக்கும்: காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கம் முன்னோடியானது. வீரத்தின் உச்சகட்டமே அகிம்சைதான். தொடையை தட்டுவது வீரம் அல்ல தொடையை தட்டவும் எங்களுக்கு தெரியும்

உண்ணாவிரதங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. கெஞ்சும் நிலைக்கு தள்ளியது மத்திய அரசின் முதுகுக்கு பின்னாள் ஒளிந்திருக்கும் தமிழக அரசு

உலகின் பல நாடுகளில் சென்டரிசம் பரவி வருகிறது. ஆசியாவின் சென்டரிசத்தின் முன்னோடியாக ஏன் நாம் இருக்கக் கூடாது? மய்யமாக இருந்தாலும் சேர வேண்டிய நேரத்தில் நல்லவர்களுடன் சேருவோம்

சினிமாவில் அரசியல் செய்ததில்லை. அரசியல் செய்யும் போது நடிக்க மாட்டேன். என்னை விட சிறந்த நடிகர் ஜெயக்குமார். அவர் எனக்கு பொதுஜன விளம்பரதாரராக இருக்கின்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories