ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுகவினர் வன்முறை: விஜயகாந்த் கண்டனம்

vijayakanth ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வன்முறை குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். அதில், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அவரது கட்சி நிர்வாகிகளுடனும், தொண்டர்களுடன் வீதி வீதியாக வாக்கு சேகரிக்க சென்ற போது, ஆளும் அதிமுக கட்சியை சேர்ந்த சிலர் வன்முறையை கையில் எடுத்து அனைவரையும் தாக்கி உள்ளனர் அதே போல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் மற்றும் அந்த கட்சியினரும் ஆளும்கட்சியால் தாக்கப்பட்டுள்ளனர். இது முற்றிலும் சட்டத்திற்கு புறம்பான செயலாகும் இதை நான் கடுமையாக கண்டிக்கிறேன். இடைத்தேர்தல் என்றாலே ஓட்டுக்கு பணம், வேட்டி, சேலை, மது, பிரியாணி வழங்குதல் என்று இலவசங்களை வாரி வழங்கி, ஏற்கனவே ஆட்சி செய்த திமுகவும், இப்பொழுது ஆட்சி செய்யும் அதிமுகவும், தேர்தலையும், ஜனநாயகத்தையும், பண நாயகத்தின் மூலமும், ஆட்சி அதிகாரத்தின் மூலமும் கேலிக் கூத்தாக்கி வருகின்றன. இந்த லட்சணத்தில் தேர்தல் நடப்பதால் மக்களுக்கு தேர்தல் மீதும், தேர்தல் ஆணையத்தின் மீதும் முற்றிலும் நம்பிக்கை இல்லாத நிலை உருவாகி உள்ளது. தேர்தல் நியாயமான முறையில் நடந்திட, ஊழல் வாதிகளின் மீதும், வன்முறையாளர்கள் மீதும், இரும்புக் கரம் கொண்டு அடக்க தேவையான கடுமையான தேர்தல் விதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அமல்படுத்த வேண்டும். இல்லை என்றால் நம் தலைவர்கள் போராடி வாங்கி தந்த சுதந்திரமும், ஜனநாயகமும் வீணாகிவிடும். மேலும் காவல் துறையினர் வன்முறையை கையில் எடுத்த, ஆளும் அதிமுகவினரை உடனடியாக கைது செய்ய வேண்டும். வன்முறையின் மூலம் பாதிக்கபட்டவர்களுக்கு சம்பந்தபட்டவர்களிடம் இருந்து உடனடியாக இழப்பீடு பெற்றுத்தர தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய, சட்டத்தை கையில் வைத்துள்ள காவல்துறை, ஆளும் கட்சியினரின் ஏவல் துறையாக மாறிந்து காலத்தின் கொடுமை என்று தான் சொல்ல வேண்டும். மாற்றம் ஒன்று தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு. ஊழலுக்கு எதிராக ஒட்டு மொத்த சமூகமும் ஒன்று சேர்ந்து தமிழகத்தில் லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சியை மலர செய்வோம். ஜனநாயகத்தை நிலை நாட்டுவோம். -என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Topics

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories