தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் … எம்.ஆர்.எப். தொழிற்சங்கத்திற்கும், நிர்வாகத்திற்கும் இடையிலான ஊதிய உயர்வு ஒப்ந்த பேச்சுவர்த்தை மற்றும் சமரச பேச்சுவர்த்தை முறிவு ஏற்பட்டு, வழக்கு தொழிற் தீர்ப்பாயத்தில் நடைபெற்று வருகிறது. இந்pலையில் நிர்வாகம் பழிவாங்கும் உணர்வுடன் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவதுடன், தொழிலாளர்களின் பணி பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கின்றது. எம்.ஆர்.எப். நிர்வாகம் தொழிலாளர் நல ஆணையரின் அறிவுகைளை ஏற்க மறுக்கிறது ; தொழிலாளர் நலச் சட்டங்களை அப்ட்டமாக மீறி வருகிறது ; தொழிலாளர்கள் மீது நியாயமற்ற முறையில் ஊதிய வெட்டு, தற்காலிக வேலை நீக்கம், பணி நீக்கம் செய்து வருகிறது. இந்த நடவடிக்கைகள் தொழிற்சாலையின் தொழில் அமைதி மற்றும் தொழில் உறவுக்கு ஊறு எனவே எம்.ஆர்.எப். நிர்வாகத்தின் நேர்மையற்ற தொழில் நடவடிக்கைகளை கண்டித்தும், தொழிலாளர் விரோத நிர்வாகத்தின் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கேரியும், எம்.ஆர்.எப். தொழிற்சங்க கட்டிடத்தில் சங்க நிர்வாகிகள் தோழர் இராமச்சந்திரன் மற்றும் தோழர் கே.எஸ். வெங்கடெஷ் காலவரையற்ற உண்ணாநிலை அறப்போராட்டத்தை 2.2.2015 முதல் மேற்கொண்டு வருகின்றனர். தொழிலாளர் நலச் சட்டங்களை எம்.ஆர்.எப். நிர்வாகம் காலில் போட்டு மிதித்து அப்ட்டமான தொழிலாளர் விரோதப்போக்கை கையாண்டு வருகிறது. ஊதிய உயர்வு ஒப்ந்தம் 6.7.2013 அன்றுடன் முடிவடைந்து, புதிய ஊதிய உயர்வுக்கான பேச்சு வார்த்தைகளில் முடிவு எட்டப்டாத நிலையில் தற்போது தொழில் தீர்பாயத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. தொழிலாளர் மீது நியாயமற்ற முறையில் ஊதிய வெட்டு, தற்காலிக வேலை நீக்கம், பணி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் வகையில் தமிழக அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எம்.ஆர்.எப். தொழிலாளர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுக்கான முத்தரப்பு பேச்சுவர்த்தைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
- என்று கூறியுள்ளார்.


