சென்னை: மு.க. அழகிரியின் ஆதரவாளர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான அட்டாக் பாண்டி, இன்று மும்பையின் புறநகர் பகுதியான வாஷியில் கைது செய்யப்பட்டார். மதுரையில் திமுகவின் புறநகர் மாவட்ட செயலாளராக இருந்த பொட்டு சுரேஷ், கடந்த மூன்று ஆண்டுக்கு முன் கூலிப்படையால் கொலை செய்யப்பட்டார். அட்டாக் பாண்டி, இந்தக் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியாக இருந்தார். இவர் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் நெருக்கமாகவும் வலது கையாகவும் செயல்பட்டுவந்தவர். அட்டாக் பாண்டி, முன்னாள் மதுரை வேளாண் விற்பனைக் குழுவின் தலைவராக இருந்தார். மேலும், மதுரை மாநகர திமுகவின் முக்கிய பிரமுகராகவும் செயல்பட்டார். மதுரையில் கொலை,ஆள் கடத்தல், நில அபகரிப்பு என இவர் மீது நிறைய புகார்கள் உள்ளன.
மு.க.அழகிரி ஆதரவாளர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் அட்டாக் பாண்டி கைது
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

