வைகை அணையில் தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுவதை முன்னிட்டு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை முதல் 30 ஆம் தேதி வரை 216 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஏப்ரல் 30 காலை 6.15 மணிக்குள் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

vaigai - 2026மதுரையில் சித்திரை திருவிழா கடந்த 18ம் தேதி கொட்டி ஏற்றத்துடன் தொடங்கியது. இதில் திருவிழாவான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் வரும் 30-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி வரும் 28-ம் தேதி மதுரைக்கு கள்ளழகர் தங்கப்பல்லக்கில் புறப்படுகிறார். வழியில் பல மண்டகப்படிகளில் தங்கி அவர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

28-ம் தேதி தங்கப் பல்லக்கில் புறப்படும் கள்ளழகர் கொண்டப்பநாயக்கர் மண்டபத்தில் இருந்து பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் வருகிறார். அங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. அதன் பிறகு கள்ளழகர் மதுரை நோக்கி புறப்படுகிறார். மறுநாள் 29-ம் தேதி காலை 6 மணிக்கு மூன்றுமாவடியில் எதிர்சேவை நடைபெறுகிறது. இரவில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் திருமஞ்சனமாகி திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது. தொடர்ந்து வீதியுலா செல்லும் கள்ளழகர் 30-ம் தேதி திங்கட்கிழமை காலை 5.45 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார். அதன் பிறகு வண்டியூர் பெருமாள் கோவிலுக்கு செல்லும் கள்ளழகர் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கிறார். தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அதன் பிறகு ராஜாங்க திருக்கோலத்தில் 2-ம் தேதியும், 3-ம் தேதி பூப்பல்லக்கிலும் காட்சி தரும் கள்ளழகர் அங்கிருந்து அழகர்கோவிலுக்கு புறப்படுகிறார்.

4-ம் தேதி கள்ளழகர் அழகர் மலைக்கு செல்ல 5-ம் தேதியுடன் விழா நிறைவு பெறுகிறது. இந்த வருடம் சுமார் 435 மண்டகப்படிகளில் அழகர் எழுந்தருள்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories