25-03-2023 8:22 AM
More
    Homeசற்றுமுன்நீட் தேர்வு எழுத தமிழகத்தில் மையம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம்

    To Read in other Indian Languages…

    நீட் தேர்வு எழுத தமிழகத்தில் மையம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம்

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம்,மதுரையில் மே 2-3 ஆகிய இரண்டு நாட்கள்,மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே. ரங்கராஜன், பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முதல் நாளான இன்று (02.05.2018) நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

    download 1 - Dhinasari Tamil

    நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு மையங்களை உடனடியாக வெளியிடுக!

    தமிழகத்தில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு கடந்த ஆண்டுகளைப் போல் அல்லாமல், இந்த ஆண்டு திடீரென வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழக மாணவர்களுக்கு மாநிலத்திற்கு உள்ளேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. தேர்வு நடைபெற இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் வெளிமாநிலத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்ட மாணவர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட தேர்வு மையங்கள் எவை என்பது குறித்த விபரங்கள் இதுவரை அறிவிக்கப்படாமலே உள்ளது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பாஜக அரசு நீட் தேர்வை திணித்தது மட்டுமின்றி, நீட் தேர்வுக்கான மையங்களில் குளறுபடிகளையும் ஏற்படுத்தியுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

    எனவே, மாற்றியமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களை உடனடியாக அறிவிக்க வேண்டுமெனவும், வெளியூர்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டால், மாணவர்கள் ரயிலில் பயணம் செய்ய விரும்பினால், சிறப்புச் சலுகையாக ரயிலில் இடஒதுக்கீடு அடிப்படையில் உறுதி செய்யப்பட்ட பயணச்சீட்டு வழங்கிட வேண்டுமெனவும், இதற்கான உரிய முயற்சியை மாநில அரசு தேர்வு வாரியத்தோடு பேசி உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.

     

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    11 − 2 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,035FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,632FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    Latest News : Read Now...