பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 108-வது பிறந்தநாள் விழாவையொட்டி மதுரை கோரிப்பாளையத்திலுள்ள தேவர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் நேற்று மாலை அணிவித்து கூறுகையில், ‘‘மதுரையில் தேவர் சிலையை நிறுவிய தலைவர் கருணாநிதியின் கல்வெட்டை மறைத்து பராமரிப்பு என்ற பெயரில் ஜெயலலிதாவின் கல்வெட்டை பதித்துள்ளார்கள்.
கல்வெட்டில் உள்ள எழுத்துக்கள் மறைக்கும் வகையில் அழிக்கப்பட்டுள்ளன. 1974ல் தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது இந்த சிலையை நிறுவி, இந்திய குடியரசு தலைவராக இருந்த வி.வி.கிரியை அழைத்து திறக்கச் செய்தார்.
இந்த வரலாற்று கல்வெட்டை மறைக்கும் வகையில் அரசியல் உள்நோக்குடன், காழ்ப்புணர்ச்சியுடன், நயவஞ்சகத்துடன் இந்த கல்வெட்டை மறைத்திருக்கிறார்கள்.இதற்கு முன் சென்னையில் கண்ணகி சிலையை இந்த ஆட்சியாளர்கள் அகற்ற முற்பட்டார்கள்.
அதே ரீதியில் ஒரு வேளை இந்த தேவர் சிலையை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது,’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்



