தேவர் சிலை கல்வெட்டில் கருணாநிதியின் பெயரை மறைத்து ஜெயலலிதாவின் பெயர் : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

Published:

 பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 108-வது பிறந்தநாள் விழாவையொட்டி மதுரை கோரிப்பாளையத்திலுள்ள தேவர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் நேற்று மாலை அணிவித்து கூறுகையில், ‘‘மதுரையில் தேவர் சிலையை நிறுவிய தலைவர் கருணாநிதியின் கல்வெட்டை மறைத்து பராமரிப்பு என்ற பெயரில் ஜெயலலிதாவின் கல்வெட்டை பதித்துள்ளார்கள்.

கல்வெட்டில் உள்ள எழுத்துக்கள் மறைக்கும் வகையில் அழிக்கப்பட்டுள்ளன. 1974ல் தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது இந்த சிலையை நிறுவி, இந்திய குடியரசு தலைவராக இருந்த வி.வி.கிரியை அழைத்து திறக்கச் செய்தார்.

இந்த வரலாற்று கல்வெட்டை மறைக்கும் வகையில் அரசியல் உள்நோக்குடன், காழ்ப்புணர்ச்சியுடன், நயவஞ்சகத்துடன் இந்த கல்வெட்டை மறைத்திருக்கிறார்கள்.இதற்கு முன் சென்னையில் கண்ணகி சிலையை இந்த ஆட்சியாளர்கள் அகற்ற முற்பட்டார்கள்.

அதே ரீதியில் ஒரு வேளை இந்த தேவர் சிலையை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது,’’ என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img