சென்னை:
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நவம்பர் 16 ஆம் தேதி முதல் மத்தியப் படை பாதுகாப்பு வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கடந்த கால நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் 7 நாட்களுக்குள் மத்திய அரசு கோரிய வைப்புத் தொகையை தமிழக அரசு செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதன் மூலம் தில்லி, அலகாபாத் உயர் நீதிமன்றங்களைத் தொடர்ந்து தற்போது சென்னை உயர் நீதிமன்றத்திற்கும் மத்திய படை பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.



