மகள் இறந்த சோகம்: தாய், மகன் தற்கொலை

சென்னை:

சென்னையில், உடல்நலக் குறைவால் மகள் இறந்த சோகத்தில், தாயும் மகனும் தற்கொலை செய்து கொண்டனர். பூட்டிய வீட்டுக்குள் கிடந்த 3 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

சென்னை கொருக்குப்பேட்டை ஆரணி ரங்கன் தெருவைச் சேர்ந்த சங்கரலிங்கத்தின் மனைவி சகுந்தலா(50). இவர்களுக்கு சரவணன்(30) என்ற மகனும், கிருஷ்ணவேணி(27) என்ற மகளும் இருந்தனர். சங்கரலிங்கத்தின் சொந்த ஊர் தூத்துக்குடி. 2 ஆண்டுகளுக்கு முன்பு சங்கரலிங்கம் உடல்நலக் குறைவால் காலமாகிவிட்டார்.

சகுந்தலா தனது மகன், மகளுடன் அப்பகுதியில் வசித்து வந்தார். கிருஷ்ணவேணிக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்ததால் அவருக்கு திருமணம் ஆகாமலேயே இருந்தது. இதனால் சரவணனும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 3 நாட்களாக சகுந்தலாவின் வீடு பூட்டியே இருந்துள்ளது. நேற்று காலை அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வரவே, அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து, கொருக்குப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சகுந்தலாவும், சரவணனும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்தனர். கிருஷ்ணவேணி தரையில் பிணமாக கிடந்தார். அவரது உடலைச் சுற்றி எறும்பு வராமல் இருப்பதற்காக எறும்புப் பொடி போடப்பட்டு இருந்தது.

ALSO READ:  ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

இதை அடுத்து மூவரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடந்த சில மாதங்களாக கிருஷ்ணவேணி உடல் நலக்குறைவுக்கு சிகிச்சை பெற்று வந்தும் பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த சகுந்தலாவும், சரவணனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

ஒரே குடும்பத்தில் 3 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories