சீமான் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்

Published:

13 May28 Seeman - 2026தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து நெல்லையில் இன்று சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. நெல்லை ரயில் அருகில் நாளை காலை 10 மணிக்கு, சீமான் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி 100 நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கடந்த 22ம் தேதி தூத்துக்குடி கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து 21ம் தேதி இரவு முதல் தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடையை மீறி நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்து துப்பாக்கிச் சூடு, தடியடியில் 13 பேர் பலியாகினர். 80க்கும் மேற்பட்டவர்கள் காயம்அடைந்துள்ளனர். இதில் 40க்கும் மேற்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பலர் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடியில் இருந்து நெல்லை உள்ளிட்ட பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img