அறிவித்தபடி இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

18 May28 secratriate - 2026தமிழக சட்டப்பேரவை திட்டமிட்டபடி இன்று கூடவுள்ள நிலையில், மே 29ம் தேதி முதல் ஜூலை 9 ம் தேதி வரை மொத்தம் 23 நாட்களுக்கு கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.

கடந்த 24ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் சட்டப்பேரவை கூடுவதற்கான தேதி குறித்து அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக வார இறுதி நாட்களை தவிர்த்து மே 29ம் தேதி முதல் ஜூன் 14 வரையும் இரண்டாம் கட்டமாக ஜூன் 25 முதல் ஜூலை 9 வரையும் மொத்தம் 23 நாட்களுக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜீன் 15 முதல் ஜூன் 24 வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று முதல் தினமும் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு கேள்வி நேரம் நடைபெறும். அதில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, நீட் தேர்வில் மாணவர்கள் மீது கொடுக்கப்பட்ட கெடுபிடிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து எதிர்கட்சிகள் கேள்விகளை எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் நாளான இன்று, கேள்வி நேரத்தை தொடர்ந்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, தகவல் தொழில் நுட்பவியல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும். 30ம் தேதி பள்ளி கல்வித்துறை, உயர் கல்வித்துறை, 1ம் தேதி கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை, 4ம் தேதி உள்ளாட்சித்துறை, 5ம் தேதி நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள், சட்டத்துறை 11ம் தேதி நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை என மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும்.

இந்நிலையில் மக்களை பாதிக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய அதிமுக அரசிடம் கேள்வி கேட்க தயாராக உள்ளதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories