தமிழகத்துக்குள் அனுப்பும் சரக்குகளுக்கு இன்று முதல் இ-வே பில் கட்டாயம்: கோவா உட்பட 4 மாநிலங்களில் இன்று அமல்

20 June01 e way bill - 2026மாநிலத்துக்குள் அனுப்பப்படும் சரக்குகளுக்கான இ-வே பில் நடைமுறையானது இன்று முதல் அமலுக்கு வருகிறது. வர்த்தகர்கள், உற்பத்தியாளர்களின் கோரிக்கைக்கு ஏற்ப வரைமுறைகளில் மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்து வணிகவரித் துறை அதிகாரிகள் இறுதி கட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்டது. அதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக மாநிலங்களுக்கு மத்தியிலும், மாநிலத்துக்கு உள்ளும் ரூ.50 ஆயிரம் மதிப்புக்கு மேல் எடுத்துச் செல்லும் சரக்குகளுக்கு இ-வே பில் கட்டாயம்.

ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்கு சரக்குகளை அனுப்புவதற்கு இணையத்தில் பதிவு செய்து அனுப்ப வேண்டும். இ-வே பில் இல்லாமல் சரக்குகளை அனுப்ப முடியாது என்ற இந்த வரைமுறை கடந்த ஏப்ரல் முதல் தேதி அமல்படுத்தப்பட்டது.

ஆரம்ப நிலையில் எதிர்ப்பு

ஆரம்ப நிலையிலேயே இத்திட்டத்துக்கு வணிகர்கள், ஏற்றுமதியாளர்கள், உள்நாட்டு உற்பத்தியாளர்கள், தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வரைமுறைகளில் திருத்தங்களைக் கொண்டு வரவும், நடைமுறைச் சிக்கல்களைக் களையவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலை பிற சில மாநிலங்களிலும் நிலவியதால் மாநிலங்களுக்கு வெளியில் செல்லும் சரக்குகளைத் தவிர்த்து, மாநிலத்துக்குள் அனுப்பும் சரக்குகளுக்கு படிப்படியாக இதைக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி தமிழகத்தில் இன்று முதல் இது நடைமுறைக்கு வருகிறது.

திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு நிர்ணயிக்கப்படும் ரூபாய் மதிப்புக்கு மேல் கொண்டு செல்லப்படும் சரக்குகளுக்கு கட்டாயமாக இ-வே பில் தேவையாகும்.

இ-வே பில் இல்லையெனில் சரக்கின் மதிப்புக்கு ஏற்ப வரி மற்றும் நூறு சதவீத அபராதம் விதிக்கப்படும் என வணிகவரித் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories