ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு 30-ம் நாள் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி இன்று நடக்கிறது

08 June19 thutokodi shooting - 2026ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு 30-ம் நாள் நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை தூத்துக்குடியில் நடத்தக் காவல்துறை கெடுபிடி செய்வதால் இன்று சென்னையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

தூத்துக்குடியில் கடந்த மாதம் 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100-வது நாளாகப் போராடிய பொதுமக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் இறந்த நிலையில் இப்போதும் தூத்துக்குடி மாவட்டம் போலீஸ் கண்காணிப்பிலேயே இருக்கிறது. இதையடுத்து துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் 30-வது நாள் நினைவு அஞ்சலிக் கூட்டத்தை சென்னையில் நடத்த நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களைச் சேர்ந்த அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

இதுகுறித்து குமரி மக்கள் அமைப்பின் நிறுவனர் ஜெகத்கஸ்பர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் 30-வது நாள் நினைவஞ்சலியை மிகவும் புனிதமானதாகக் கருதுகின்றனர். ஆனால், தூத்துக்குடியில் பொது நினைவஞ்சலி நிகழ்ச்சிகளுக்குக் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அத்துடன் மக்களைச் சுற்றி வளைத்தல், இரவு நேரத் தேடுதல் வேட்டை போன்ற மனிதநேயமற்ற கெடுபிடிகளால் குடும்பங்கள் நிம்மதியாக ஒன்றுசேரமுடியாத அசாதாரணச் சூழலையும் காவல்துறை உருவாக்கி வைத்துள்ளது. ஆதலால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களில் சிலரும், தூத்துக்குடி சமூகத்தின் பெரியோர்கள் சிலரும் கேட்டுக்கொண்டதன்பேரில் அவசர ஏற்பாடாகச் சென்னையில் நினைவஞ்சலி ஏற்பாடு செய்கிறோம். தூத்துக்குடிப் படுகொலைகளை நியாயப்படுத்தாத அரசியல் கட்சிகள் இயக்கங்களுக்கு அழைப்பும் சமர்ப்பித்துள்ளோம்.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

எனவே, தமிழ்ச் சொந்தங்கள் வந்து உணர்வெழுச்சியுடன் இணைந்திட வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் வேண்டுகிறோம். 30-ம் நாள் அஞ்சலி நிகழ்வு இன்று மாலை 6.30 மணிக்குச் சென்னை சி.ஐ.டி. காலனி 2-வது முதன்மைச் சாலையில் உள்ள கவிக்கோ அரங்கத்தில் நடக்கிறது. சென்னை வாழ் தூத்துக்குடி, நெல்லை, குமரி மக்கள் சார்பில் ‘ஜனநாயகத்தைக் காப்போம்’ என்ற பதாகை முழக்கத்தின் கீழ் இந்நிகழ்ச்சியை ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் வழிநடத்துகிறார். அதிர்ச்சியிலும், ஆழ்ந்த மனக்காயங்களிலும், தொடரும் காவல்துறை கெடுபிடிகளிலும் நொந்துபோயிருக்கிற தூத்துக்குடி மக்களுக்கு இந்நிகழ்வு பேராறுதல் தரும்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories