ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு 30-ம் நாள் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி இன்று நடக்கிறது

08 June19 thutokodi shooting - 2026ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு 30-ம் நாள் நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை தூத்துக்குடியில் நடத்தக் காவல்துறை கெடுபிடி செய்வதால் இன்று சென்னையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

தூத்துக்குடியில் கடந்த மாதம் 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100-வது நாளாகப் போராடிய பொதுமக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் இறந்த நிலையில் இப்போதும் தூத்துக்குடி மாவட்டம் போலீஸ் கண்காணிப்பிலேயே இருக்கிறது. இதையடுத்து துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் 30-வது நாள் நினைவு அஞ்சலிக் கூட்டத்தை சென்னையில் நடத்த நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களைச் சேர்ந்த அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

இதுகுறித்து குமரி மக்கள் அமைப்பின் நிறுவனர் ஜெகத்கஸ்பர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் 30-வது நாள் நினைவஞ்சலியை மிகவும் புனிதமானதாகக் கருதுகின்றனர். ஆனால், தூத்துக்குடியில் பொது நினைவஞ்சலி நிகழ்ச்சிகளுக்குக் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அத்துடன் மக்களைச் சுற்றி வளைத்தல், இரவு நேரத் தேடுதல் வேட்டை போன்ற மனிதநேயமற்ற கெடுபிடிகளால் குடும்பங்கள் நிம்மதியாக ஒன்றுசேரமுடியாத அசாதாரணச் சூழலையும் காவல்துறை உருவாக்கி வைத்துள்ளது. ஆதலால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களில் சிலரும், தூத்துக்குடி சமூகத்தின் பெரியோர்கள் சிலரும் கேட்டுக்கொண்டதன்பேரில் அவசர ஏற்பாடாகச் சென்னையில் நினைவஞ்சலி ஏற்பாடு செய்கிறோம். தூத்துக்குடிப் படுகொலைகளை நியாயப்படுத்தாத அரசியல் கட்சிகள் இயக்கங்களுக்கு அழைப்பும் சமர்ப்பித்துள்ளோம்.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

எனவே, தமிழ்ச் சொந்தங்கள் வந்து உணர்வெழுச்சியுடன் இணைந்திட வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் வேண்டுகிறோம். 30-ம் நாள் அஞ்சலி நிகழ்வு இன்று மாலை 6.30 மணிக்குச் சென்னை சி.ஐ.டி. காலனி 2-வது முதன்மைச் சாலையில் உள்ள கவிக்கோ அரங்கத்தில் நடக்கிறது. சென்னை வாழ் தூத்துக்குடி, நெல்லை, குமரி மக்கள் சார்பில் ‘ஜனநாயகத்தைக் காப்போம்’ என்ற பதாகை முழக்கத்தின் கீழ் இந்நிகழ்ச்சியை ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் வழிநடத்துகிறார். அதிர்ச்சியிலும், ஆழ்ந்த மனக்காயங்களிலும், தொடரும் காவல்துறை கெடுபிடிகளிலும் நொந்துபோயிருக்கிற தூத்துக்குடி மக்களுக்கு இந்நிகழ்வு பேராறுதல் தரும்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories