அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் ஒத்துழையாமை போராட்டம்

08 July04 rubber employee - 2026கன்னியாகுமரியில் அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் ஒத்துழையாமை போராட்டம் நடத்தி வருகின்றனர். ஊதிய உயர்வு கோரி காளிகேசம், கீரிபாறை உள்பட 9 இடங்களில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குமரி மாவட்டத்தில் மிகப்பெரும் அரசுத் துறை நிறுவனங்களில் ஒன்றாக அரசு ரப்பர் கழகம் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரங்களில், வனத்துறையிடமிருந்து குத்தகைக்குப் பெற்ற சுமார் 5 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் இங்கு ரப்பர் தோட்டம் உள்ளது.

மயிலாறு, கோதையாறு, சிற்றாறு, மணலோடை, கீரிப்பாறை ஆகிய 5 பிரதான கோட்டங்களும், அதன்கீழ் கல்லாறு, குற்றியாறு, மருதம்பாறை, காளிகேசம், பரளியாறு பிரவுகளையும் கொண்டுள்ள இந்நிறுவனத்தில், ரப்பர் மரங்களில் பால்வடித்தல், ஆலைப் பணி, களப்பணி ஆகிய பணிகளில் சுமார் 1100 நிரந்தரத் தொழிலாளர்களும், சுமார் 650 தற்காலிகத் தொழிலாளர்களும் உள்ளனர். இதில் கணிசமான எண்ணிக்கையில் பெண் தொழிலாளர்களும் உள்ளனர்.

இங்கு பணி செய்யும் தொழிலாளர்களில் குறிப்பிட்ட பகுதியினர் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களும், மலைவாழ் மக்களும் ஆவர். நகரங்களிலிருந்து வெகு தொலைவில், அடர்ந்த வனப்பகுதிகளுக்கு மத்தியில் அச்சுறுத்தும் வன விலங்குகளுக்கிடையில், பெரும்பாலும் மின்சாரமின்றி மற்றும் அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லாத குடியிருப்புகளில் வாழும் இத்தொழிலாளர்களின் வாழ்க்கை சவால்கள் மற்றும் சாகசங்கள் நிறைந்ததாகும்.

இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், இதுவரை புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவில்லை.

புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தும் வகையில் நாகர்கோவில் தொழிலாளர் துறை உதவி ஆணையர் அலுவலகத்திலும், வனத்துறை அமைச்சர் முன்னிலையிலும் இதுவரை 29 முறை பேச்சு வார்த்தைகள் நடத்தியும் உடன்பாடு ஏற்படாத நிலை உள்ளது. குறிப்பாக கடந்த பிப். 2ஆம் தேதி சென்னையில் வனத் துறை அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தமிழக முதல்வர் மூலம் 10 நாள்களில் தீர்வு ஏற்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. அதன் பிறகு இதுவரை பேச்சுவார்த்தை நடத்தப்படாத நிலை உள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். ஊதிய உயர்வை வலியுறுத்தி ரப்பர் கழக நிர்வாக இயக்குநர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோட்ட மேலாளர் அலுவலகம் ஆகியவற்றின் முன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம், மறியல் என பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் பிரச்னைக்கு தீர்வு ஏற்படவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories