அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் ஒத்துழையாமை போராட்டம்

08 July04 rubber employee - 2026கன்னியாகுமரியில் அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் ஒத்துழையாமை போராட்டம் நடத்தி வருகின்றனர். ஊதிய உயர்வு கோரி காளிகேசம், கீரிபாறை உள்பட 9 இடங்களில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குமரி மாவட்டத்தில் மிகப்பெரும் அரசுத் துறை நிறுவனங்களில் ஒன்றாக அரசு ரப்பர் கழகம் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரங்களில், வனத்துறையிடமிருந்து குத்தகைக்குப் பெற்ற சுமார் 5 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் இங்கு ரப்பர் தோட்டம் உள்ளது.

மயிலாறு, கோதையாறு, சிற்றாறு, மணலோடை, கீரிப்பாறை ஆகிய 5 பிரதான கோட்டங்களும், அதன்கீழ் கல்லாறு, குற்றியாறு, மருதம்பாறை, காளிகேசம், பரளியாறு பிரவுகளையும் கொண்டுள்ள இந்நிறுவனத்தில், ரப்பர் மரங்களில் பால்வடித்தல், ஆலைப் பணி, களப்பணி ஆகிய பணிகளில் சுமார் 1100 நிரந்தரத் தொழிலாளர்களும், சுமார் 650 தற்காலிகத் தொழிலாளர்களும் உள்ளனர். இதில் கணிசமான எண்ணிக்கையில் பெண் தொழிலாளர்களும் உள்ளனர்.

இங்கு பணி செய்யும் தொழிலாளர்களில் குறிப்பிட்ட பகுதியினர் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களும், மலைவாழ் மக்களும் ஆவர். நகரங்களிலிருந்து வெகு தொலைவில், அடர்ந்த வனப்பகுதிகளுக்கு மத்தியில் அச்சுறுத்தும் வன விலங்குகளுக்கிடையில், பெரும்பாலும் மின்சாரமின்றி மற்றும் அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லாத குடியிருப்புகளில் வாழும் இத்தொழிலாளர்களின் வாழ்க்கை சவால்கள் மற்றும் சாகசங்கள் நிறைந்ததாகும்.

இங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், இதுவரை புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவில்லை.

ALSO READ:  சாத்தூர் -ஆம்னி பேருந்து மோதி +2 மாணவர்கள் 3 பேர் பலி..

புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தும் வகையில் நாகர்கோவில் தொழிலாளர் துறை உதவி ஆணையர் அலுவலகத்திலும், வனத்துறை அமைச்சர் முன்னிலையிலும் இதுவரை 29 முறை பேச்சு வார்த்தைகள் நடத்தியும் உடன்பாடு ஏற்படாத நிலை உள்ளது. குறிப்பாக கடந்த பிப். 2ஆம் தேதி சென்னையில் வனத் துறை அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தமிழக முதல்வர் மூலம் 10 நாள்களில் தீர்வு ஏற்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. அதன் பிறகு இதுவரை பேச்சுவார்த்தை நடத்தப்படாத நிலை உள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். ஊதிய உயர்வை வலியுறுத்தி ரப்பர் கழக நிர்வாக இயக்குநர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோட்ட மேலாளர் அலுவலகம் ஆகியவற்றின் முன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம், மறியல் என பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் பிரச்னைக்கு தீர்வு ஏற்படவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories