ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காததே சென்னை பெருவெள்ளத்திற்கு காரணம் – மத்திய கணக்கு தணிக்கை துறை

07 July10 Chennai floods - 2026கடந்த 2005-06 ஆம் ஆண்டுக்கான கணக்கு தணிக்கை அறிக்கையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 525 நீர்ப்பாசன குளங்களில் முழுமையாக நீரை தேக்க முடியாமல், ஆக்கிரமிப்புகள் சூழ்ந்திருக்கும் நிலை சுட்டிக்காட்டப்பட்டதாக இந்திய கணக்கு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை மற்றும் புறநகரில் உள்ள மொத்த ஏரிகளில் 40 சதவிகிதம் அளவுக்கு ஆக்கிரமிப்புகள் இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் 2013 ஆம் ஆண்டு அறிக்கையில் 40 சதவிகிதத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் 45 சதவீதமாக அதிகரித்துள்ளது என்பதும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்டோபர் 2016-ல் ஆக்கிரமிப்பு அளவு 69 சதவீதமாக உயர்ந்துள்ள அதிர்ச்சி புள்ளி விவரங்களும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

தமிழ்நாடு ஏரிகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் சட்டம் 2007-ல் இயற்றப்பட்டது. ஆனால் இந்த சட்டம் அமலுக்கு வந்த 9 ஆண்டுகளுக்குப் பின்னரும், ஆயிரத்து 554 குளங்களில் 551 குளங்களை மட்டுமே நீர்வள ஆதாரத்துறை ஆய்வு செய்துள்ளது. மார்ச் 2016 வரை 36 ஆயிரத்து 814 ஆக்கிரமிப்பு கட்டடங்கள் கண்டறியப்பட்டு, 30 சதவீத கட்டடங்கள் மட்டுமே அகற்றப்பட்டு உள்ளன.

381 குளங்கள் முழுமையான கொள்ளளவுக்கு நிரம்ப முடியாமல் ஆக்கிரமிப்புகள் பெரும் தடையாக நீடித்து வருகிறது என்ற சோகப் பதிவும் அறிக்கையில் உள்ளது. கடந்த 2013-14 ஆம் ஆண்டில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. வலுவான சட்டங்கள், தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டும் 2013 – 14ம் ஆண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கையே எடுக்காதது 2015-ல் ஏற்பட்ட பெரு வெள்ளத்துக்க்கான ஒரு காரணமாக அமைந்தது என மத்திய கணக்குத் தணிக்கைத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories