சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழகம் முதலிடம் பிடித்த கடிதத்தை முதல்வரிடம் காட்டிய அமைச்சர்

21 July23 tourist - 2026மத்திய சுற்றுலாத்துறை 2017-ஆம் ஆண்டில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பெற்றதை அறிவித்து வழங்கிய கடிதத்தினை, முதலமைச்சர் பழனிசாமியிடம் சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

தமிழகத்துக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. மத்திய சுற்றுலா வளர்ச்சித் துறை புள்ளிவிவரப்படி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் 2014-ல் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இதற்கு நம் நாட்டின் கடற்கரைகள், கோயில்கள், வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் கலாச்சாரம் முக்கிய காரணமாக உள்ளது. இந்தியாவில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றன. இதையொட்டி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை மத்திய சுற்றுலாத் துறை பதிவு செய்து வருகிறது. இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் 3 ஆண்டு புள்ளிவிவர அறிக்கை நாடாளுமன்ற மக்களவையில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

இதில் 2014-ல் சுமார் 46.57 லட்சம் சுற்றுலாப் பயணிகளுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 43.89 லட்சம் பயணிகளுடன் மகாராஷ்டிரம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

தமிழகத்தில் 2012-ல் 35.61 லட்சம், 2013-ல் 39.90 லட்சம், 2014-ல் 46.57 லட்சம் என சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் வெளிநாட்டினரின் மனம் கவர்ந்த இடங்களாக தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், மகாபலிபுரம் கடற்கரை கோயில் மற்றும் சிற்பங்கள், ராமேஸ்வரம் கோயில், கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை, மருதமலை கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் கோயில், நீலகிரி மலை, கொடைக்கானல் ஏரி, சென்னையில் கபாலீஸ்வரர் கோயில், பார்த்தசாரதி கோயில், சாந்தோம், புனித தோமையர் தேவாலயங்கள் ஆகியவை உள்ளன.

நாட்டின் தலைநகரான டெல்லிக்கு 2012-ல் 23.45 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இது 2013-ல் 23.01 லட்சம், 2014-ல் 23.19 லட்சம் ஆக உள்ளது. டெல்லியில் 2012-ஐ விட அடுத்த 2 ஆண்டுகளில் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதற்கு டெல்லியில் வெளிநாட்டு பெண்கள் பலர் பாலியல் வன்முறைக்கு ஆளானதே காரணமாகக் கருதப்படுகிறது.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

வெளிநாட்டவரை அதிகம் கவர்ந்த இடமாகக் கருதப்படும் கோவா, முதல் 10 மாநிலங்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. என்றாலும் 2012-ல் 4.50 லட்சம், 2013-ல் 4.92 லட்சம், 2014-ல் 5.13 லட்சம் என இங்கு வெளிநாட்டவர் வருகை அதிகரித்துள்ளது.

மிசோராம் மாநிலத்துக்கு வெளிநாட்டினர் வருகை 2012-ல் 744, 2013-ல் 800, 2014-ல் 836 என குறைந்த எண்ணிக்கையில் உள்ளது. இதைவிடக் குறைவாக லட்சத்தீவுக்கு 2012-ல் 580, 2013-ல் 371, 2014-ல் 514 பேர் வருகை புரிந்துள்ளனர்.

2014-ல் முந்தைய ஆண்டைக் காட்டிலும் வருகை குறைந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களாக ஆந்திரா, டையூ-டாமன், இமாச்சலப் பிரதேசம், சண்டீகர், கர்நாடகா ஆகியவை உள்ளன.

தேசிய அளவிலான புள்ளிவிவரப்படி, 2012-ல் நம் நாட்டுக்கு 1.82 கோடி பேர் சுற்றுலா வந்துள்ளனர். இது 2013-ல் 1.19 கோடியாக குறைந்துள்ளது. ஆனால் 2014-ல் 2.25 கோடியாக உயர்ந்துள்ளது.

வெளிநாட்டு பயணிகளால் இந்தியாவுக்கு கிடைத்த வெளிநாட்டு பணம் 2012, 2013 மற்றும் 2014-ல் முறையே ரூ. 94,487 கோடி, ரூ.1,07,671 கோடி, ரூ. 1,23,320 கோடி ஆக உள்ளது.

ALSO READ:  தமிழக வளர்ச்சிக்கு பாஜக - அதிமுக கூட்டணி அவசியம்-சரத்குமார் ..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories