சென்னை: தமிழகத்தில் அண்மைக் காலமாக நெருக்கடிகளுக்கு உட்பட்டு, அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் அரசு அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது. திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கள மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த முத்துக் கிருஷ்ணன் நேற்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அதேநாளில் கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் நியாவிலைக்கடையில் விற்பனையாளராக பணியாற்றி வரும் சக்திவேல் என்பவர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரிகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அரசு ஊழியர்களின் தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சி பேரதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. தமிழக அரசுத்துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. திருவாரூரில் தற்கொலை செய்து கொண்ட முத்துகிருஷ்ணன் அளித்த மரண வாக்குமூலத்தில் தமது உயரதிகாரியின் கொடுமையைத் தாங்க முடியாமல் தான் இந்த முடிவைத் தேடிக் கொண்டதாக தெரிவித்திருக்கிறார். அதேபோல், தமது தற்கொலை முயற்சிக்கு அ.தி.மு.க. நிர்வாகியின் கொடுமையே காரணம் என்று சக்திவேல் தெரிவித்துள்ளார். அரசு பணிகளுக்கு இலக்கு நிர்ணயிக்காத அமைச்சர்களும், ஆளுங்கட்சியினரும் தங்களுக்கு மாதம் இவ்வளவு ரூபாய் கப்பம் கட்ட வேண்டும் என்று ஊழலுக்கு இலக்கு நிர்ணயித்து உயரதிகாரிகளுக்கு நெருக்கடி தருவதால், உயரதிகாரிகளும் தங்களுக்கு கீழ் பணியாற்றுவோரை ஊழல் செய்யும்படி கட்டாயப்படுத்துகின்றனர். இதனால் வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி, பொது சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் அறிவொளி உள்பட பத்துக்கும் மேற்பட்டோர் கடந்த ஓராண்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அதிகாரி நேரு உள்ளிட்ட பல அதிகாரிகள் தற்கொலைக்கு முயன்றிருக்கின்றனர். அரசு அலுவலகங்களில் கடுமையான மன அழுத்தத்துடன் பணியாற்ற வேண்டியிருப்பதால் தூக்கமின்மை போன்ற மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கும், மாரடைப்பு, சர்க்கரை நோய் போன்ற அழுத்தம் சார்ந்த நோய்களுக்கு ஆளாகிறார்கள். அரசு நிர்வாகம் சுமூகமாக நடைபெறத் தேவையான பணிச் சூழலை ஏற்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை ஆகும். அனைத்து துறைகளிலும் ஊழல் செய்யத் துடிக்கும் தமிழக ஆட்சியாளர்களால் அரசு நிர்வாகம் நாளுக்குநாள் சீரழிந்து வருகிறது. அமைச்சர்கள் தொடங்கி வட்டச் செயலாளர்கள் வரை அனைவரும் தங்கள் நிலையிலுள்ள அரசு ஊழியர்களை விதிகளை மீறி செயல்படும்படி மிரட்டுகிறார்கள். திருச்சி மருத்துவமனை இருப்பிட மருத்துவ அதிகாரி நேரு, கோவை நியாயவிலைக்கடை ஊழியர் சக்திவேல் ஆகியோர் அளித்த வாக்குமூலங்கள் இதை உறுதி செய்கின்றன. இதனால் ஒரு காலத்தில் வரமாக இருந்த அரசு வேலை சாபமாக மாறி வருகிறது. தமிழகத்தில் அதிமுக அரசு தற்கொலைகளின் அரசாக மாறி வருகிறது. இதேநிலை நீடித்தால் நேர்மையான, உண்மையான மனிதர்கள் எவரும் அரசு பணிக்கு வர மாட்டார்கள். ஏற்கனவே அரசு பணியில் இருக்கும் நேர்மையான அதிகாரிகள் கூட ஊழல்வாதியாக மாற நேரிடும் அல்லது கடுமையான மன அழுத்தத்தில் சிக்கி நடைபிணமாக வாழ வேண்டியிருக்கும். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். இதற்காக, அரசு நிர்வாகத்தை வளைக்க நினைப்பவர்கள் அமைச்சர்களாக இருந்தாலும், ஆளுங்கட்சி கவுன்சிலர்களாக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அரசு நிர்வாகத்தில் எங்கள் கட்சி உறுப்பினர்கள் எவரும் தலையிட மாட்டார்கள் என்று தமிழகத்தை ஆளும் கட்சி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். நிர்வாகத்தில் ஆளுங்கட்சியினரின் குறுக்கீடுகள் ஒருபோதும் இருக்காது என்று அதிகாரிகளுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் நடந்த தற்கொலைகள் மற்றும் தற்கொலை முயற்சிகள் குறித்து விரிவான விசாரணை நடத்த மேதகு தமிழக ஆளுனர் அவர்கள் ஆணையிட வேண்டும். அதுமட்டுமின்றி, இதற்கு காரணமாக இருந்தவர்களையும் ஆளுனர் தண்டிக்க வேண்டும்
Hot this week
மதுரை
மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
நெல்லை
நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!
பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
சற்றுமுன்
ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!
இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.
சற்றுமுன்
10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?
தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Topics
மதுரை
மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
நெல்லை
நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!
பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
சற்றுமுன்
ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!
இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.
சற்றுமுன்
10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?
தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டுரைகள்
பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?
பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.
சற்றுமுன்
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

