திருச்சி அருகே மணல் லாரிகளால் சாலை விபத்து: 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

Published:

திருச்சியை அடுத்த புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்திலும், மணப்பாறை பகுதியிலும் மணல் லாரிகளால் ஏற்பட்ட சாலை விபத்துகளில் 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். புதுக்கோட்டை திருமயம் பகுதியில் 15 பேர், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, கோயிலில் வழிபடச் சென்றனர். வழிபாட்டை முடித்து விட்டு, மாட்டு வண்டியில் வீடு திரும்பியபோது அவ்வழியாக வந்த மணல் லாரி ஒன்று மாட்டுவண்டி மீது மோதி விபத்து ஏற்பட்டது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சொரியம்பட்டியில், சாலையோரம் நின்று கொண்டிருந்த மணல் லாரி மீது தனியார் ஆம்னி பேருந்து மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்துகளில் காயம் அடைந்த 12 பேர் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img