குரூப் 4 தேர்வில் ஓஎம்ஆர் சீட் தொடர்பாக எந்த பிரச்னையும் எழவில்லைஎன்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் இன்று அளித்த பேட்டியில், புதிய முறைகளின்படி குரூப் 4 தேர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது
என்றும்,
குரூப் 4 தேர்வை 17 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதியுள்ளனர்
என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய தேர்வு இதுதான் ஆகஸ்ட் 30வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது
என்று தெரிவித்துள்ளனர்.



