சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை: மசோதா நிறைவேற்றம்

06 July31 Lok Saba - 202612 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் குற்றவியல் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கத்துவா மற்றும் உன்னாவோ பகுதிகளில் நடைபெற்ற கொடூரமான பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளைத் தொடர்ந்து, சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி குற்றவியல் சட்டத்திருத்த அவசரச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் அவசரச்சட்டத்துக்கு மாற்றாக சட்டத்திருத்த மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த மசோதாவில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில், அதிகபட்சமாக மரண தண்டனையும், குறைந்தபட்சமாக 20 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கு எதிரான வழக்கில், குறைந்தபட்ச தண்டனையாக 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும், அதை ஆயுள் சிறை தண்டனையாக நீட்டிக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது. அனைத்து விதமான பாலியல் வன்கொடுமை வழக்குகளையும் 2 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கவும் மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மேல்முறையீடுகள் மீதான விசாரணை 6 மாதங்களுக்குள் முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு முன் ஜாமின் வழங்கப்படாது. குற்றம்சாட்டப்பட்டவரின் ஜாமின் மனு மீது உத்தரவிடும் முன்பாக, அதன் மீது பதிலளிக்க அரசு வழக்கறிஞர் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்புக்கு 15 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு 2 மணி நேர விவாதத்துக்கு பிறகு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வாக்களித்தன.

இதனிடையே, கும்பல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் விரைவில் மசோதா கொண்டு வரப்படும் என மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தின் யவத்மால் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கும்பல் வன்முறை ஒரு காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை என்றும், எந்த நாகரீக சமூகத்தாலும் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார். குழந்தை கடத்தல் பீதியாலும், பசு பாதுகாப்பு என்ற பெயரிலும் நாட்டில் கும்பல் தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

Topics

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

வந்தே மாதரம்; சர்ச்சைக்கு உரியவர்கள் சர்ச்சை ஆக்குகிறார்கள்!

இருபெரும் திராவிடக் கழகங்களை தேர்தலில் வீழ்த்தி ஆட்சி அமைத்துள்ள த.வெ.க இந்த உணர்வைப் பின்பற்றி ஆட்சி செய்யவேண்டும், மத்திய மாநில உறவுகளைப் பேணவேண்டும்

பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு தவிர்க்க வேண்டும்; பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி திடீர் வேண்டுகோள்

Entertainment News

Popular Categories