February 20, 2026, 7:01 AM
24.5 C
Chennai

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை: மசோதா நிறைவேற்றம்

06 July31 Lok Saba - 202612 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் குற்றவியல் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கத்துவா மற்றும் உன்னாவோ பகுதிகளில் நடைபெற்ற கொடூரமான பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளைத் தொடர்ந்து, சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி குற்றவியல் சட்டத்திருத்த அவசரச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் அவசரச்சட்டத்துக்கு மாற்றாக சட்டத்திருத்த மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த மசோதாவில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில், அதிகபட்சமாக மரண தண்டனையும், குறைந்தபட்சமாக 20 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கு எதிரான வழக்கில், குறைந்தபட்ச தண்டனையாக 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும், அதை ஆயுள் சிறை தண்டனையாக நீட்டிக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது. அனைத்து விதமான பாலியல் வன்கொடுமை வழக்குகளையும் 2 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கவும் மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மேல்முறையீடுகள் மீதான விசாரணை 6 மாதங்களுக்குள் முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு முன் ஜாமின் வழங்கப்படாது. குற்றம்சாட்டப்பட்டவரின் ஜாமின் மனு மீது உத்தரவிடும் முன்பாக, அதன் மீது பதிலளிக்க அரசு வழக்கறிஞர் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்புக்கு 15 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு 2 மணி நேர விவாதத்துக்கு பிறகு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வாக்களித்தன.

இதனிடையே, கும்பல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் விரைவில் மசோதா கொண்டு வரப்படும் என மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தின் யவத்மால் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கும்பல் வன்முறை ஒரு காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை என்றும், எந்த நாகரீக சமூகத்தாலும் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார். குழந்தை கடத்தல் பீதியாலும், பசு பாதுகாப்பு என்ற பெயரிலும் நாட்டில் கும்பல் தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories