தமிழக தொழிலாளர்கள் படுகொலை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவசர ஆலோசனை

Published:

சென்னை: ஸ்ரீவாரு மெட்டு ஷேசாலம் வனப் பகுதியில் 12 தமிழக தொழிலாளர்கள் உள்பட 20 பேர் ஆந்திர போலீஸாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக போலீஸ் உயரதிகாரிகளுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், டி.ஜி.பி. அசோக்குமார், உள்துறைச் செயலர் அபூர்வா வர்மா, அரசு ஆலோசகர்கள் ராமானுஜம், ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

Related articles

Recent articles

spot_img