January 23, 2025, 6:57 AM
23.2 C
Chennai

ஆந்திராவில் 20 பேர் சுட்டுக்கொலை: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் போலீஸார் தீவிர கண்காணிப்பு

சென்னை: திருப்பதி அருகே சீனிவாசமங்காபுரம் பகுதி வனப்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 12 பேர் உள்பட 20 பேர் ஆந்திர போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமிழகத்தில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப் பட்டுள்ளது. செம்மரக் கடத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆந்திர தொழிலதிபர்கள் திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், விழுப்புரம், சேலம் மாவட்ட எல்லையோர கிராமங்களில் வசிக்கும் தொழிலாளர்களை செம்மரக்கடத்தலுக்கு பயன்படுத்துகிறார்கள். இன்றைய சம்பவத்துக்குப் பின்னர், வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம், சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் போலீசார் உஷார் படுத்தப் பட்டுள்ளனர். இந்த 5 மாவட்டங்களில் இருந்து ஆந்திர வனப் பகுதிக்குள் செல்லும் தமிழக தொழிலாளர்கள் யார்? அவர்கள் எதற்காக காட்டுக்கு செல்கிறார்கள் என்பது பற்றிய தகவலை வனத்துறையிடம் போலீசார் சேகரிக்க வேண்டும் என்று டி.ஜி.பி. அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார். இதனால் 5 மாவட்ட போலீசாரும் தங்கள் எல்லையோரங்களில் குறிப்பாக வனப்பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

ALSO READ:  நாளை திருச்செந்தூர் கோயிலில் சூரசம்ஹாரம்! விரிவான ஏற்பாடுகள்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதக் கலவரத்தை தூண்டும் திமுக.,? இந்து முன்னணி கண்டனம்

தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டுகிறதா திமுக. இன்று கேள்வி எழுப்பி, திருப்பரங்குன்றத்தில் திமுக...

கோமியம்… கோமூத்ரா… இன்னா மேட்டரு பா!

Amazon போன்ற பல இணையதளங்களில் கோமூத்ரம் விற்பனை செய்யப்படுகிறது.

விக்கிரமங்கலம் அங்காள ஈஸ்வரி கருப்புசாமி கோவில் மகா கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக ஏற்பாடுகளை திருப்பணிகுழு மற்றும் விக்கிரமங்கலம் எட்டூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

பஞ்சாங்கம் ஜன.21- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்!

கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதிக்கு பிரணவ மந்திர பொருளை உபதேசம் செய்தார். அப்போது அம்பிகையின் மடியில் இருந்த முருகன் மந்திரத்தை கேட்டுவிட்டார்.